கன்னத்தில் காதல் முத்தம் 15
காதல் 15 இருவரும் எதுவும் பேசாமல் வீடு திரும்பி இருந்தனர். ஆராத்யா அமைதியாக அவள் அறைக்கு சென்று விட, அக்னிக்கு அடுத்து என்ன செய்வதென்று புரியாத நிலை. "அப்ப இவ மனசுல, நான் அந்த ஆதியை அசிங்கப்படுத்த தான் இவளை தூக்கிட்டு வந்தேன்னு தான் நினைக்குறாளா? இத்தனை நாள்ல ஒரு நிமிஷம், ஒரு நொடி கூட இவ என்னோட காதலை உணரவே இல்லையா?" என்று வாய்விட்டு புலம்பியவன் கைப்பேசி ஒலிக்க, அதை எடுத்து பார்த்தான். வழக்கம் போல் கௌதமும் ஷிவானியும் தான் 'கான்ஃபரன்ஸ் காலில்' அழைத்திருந்தனர். ஆராத்யா இருந்த அறையை ஒருமுறை எட்டிப்பார்த்து விட்டு, மேலே சென்று அழைப்பை ஏற்று, "ஹலோ" என்றான் இறங்கிய குரலில். "என்ன அக்னி, வாய்ஸ் டல்ல இருக்கு, எதும் ப்ராப்ளம்மா?" "ம்ம்ம்… ஆமா ஷிவானி, தியாக்கு உடம்பு சரியில்ல" என்றான். "ஏன் என்னாச்சு ஆராக்கு? இப்ப எப்டி இருக்க அவ? டாக்டர் கிட்ட கூட்டிபோனியா அவளை? டாக்டர் என்ன சொன்னாங்க?" என்று பதறியவள், "நான் உடனே அங்க கிளம்பி வரேன்" என்றாள் அவசரமாக. "ஏய்… ஏய்… நீ உடனே கிளம்பி வர்ல அளவு அவளுக்கு ஒன்னும் இல்ல, அவளுக்கு பீர...