விழி வழி காதல் நுழைந்ததடி 27
விழி 27 தன்விக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் பேச்சே வராமல் போக, கண்களில் கண்ணீர் கரைகட்டி நிற்க, இருவரையும் மாறி மாறிப் பார்த்தவள், ஆதர்ஷனைப் பாவமான பார்வை பார்த்தபடி, "என் பாஸ்க்கு எப்பவும் கொடுத்த வாக்கை மீறும் பழக்கமோ, நம்பினவங்களுக்கு துரோகம் செய்யும் பழக்கமோ இல்லையே…" என்றாள் தழுதழுத்த குரலில். "உன் ஆதுவுக்கு இப்பவும் அந்தப் பழக்கம் இல்ல தான் தன்வி" என்றான் ஆதர்ஷன் அமைதியாக. கண்ணீர் துளிர்த்த விழிகளால் அருகில் நின்ற அவள் கணவனைச் சுட்டிக்காட்டி, "அப்ப இதுக்கு என்ன பேரு? நீங்க சொன்னீங்க இல்ல, நீ தான் இந்த வீட்டு மருமக, நம்ம கல்யாணம் நடக்கும்னு" என்றாள் அழுத்தமாக. "நோ தன்வி, நல்லா யோசிச்சுப் பாரு… நான் நீதான் நம்ம வீட்டு மருமகன்னு தான் சத்தியம் பண்ணனே தவிர, எந்த இடத்திலும் நான் உன்னை மேரேஜ் பண்ணிப்பேன்னு சொல்லவே இல்ல" என்றவனைக் கண்கள் சுருக்கி முறைத்தவள், அதே கோபத்தோடு திரும்பி தஷ்ஷைப் பார்த்தாள். "இப்பவாவது நீங்க சொன்னீங்களே, நான் உண்மையைத் தெரிஞ்சிக்கும் நேரம் வரும் வரும்னு… ஐ திங்க், அந்த டைம் இப்ப வந்திடுச்சின்னு நினைக்குறேன் தஷ்" என...