நிஜம் 25
நிஜம் 25 "என்னம்மா சொல்றீங்க நீங்க.? இதெல்லாம் த்வனிய உங்ககிட்ட சொன்ன?" என்று வருண் கேட்க, "இல்ல வருண். இவளாது சொல்றதாது. அப்படி சொல்றவளா இருந்தால், இதோ இவன் இவளுக்கு செஞ்ச கொடுமைக்கெல்லாம், என்னைக்கே நடந்த உண்மைய இவன்கிட்ட சொல்லி இருப்பாளே… அப்டி செஞ்சிருந்த இவன் செத்திருப்பான். இவளும் நிம்மதியா இருந்திருப்பாளே. செஞ்சாளா இவ… இல்லயே..." என்று தன் மடியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த த்வனியின் முகத்தை ஒரு நிமிடம் பார்த்து, இழுத்து மூச்சு விட்டு, "லயா ஊரைவிட்டு போனாதை கேள்விப்பட்டப்பவே எனக்கு என்னமோ தப்பா தெரிஞ்சுது. ஏதோ பெரிய பிரச்சனை இருக்கும்ன்னு மனசுக்குள்ள ஒரு மணி அடிச்சிது. அப்ப விக்ரம் லயா பத்தி விசாரிச்சுட்டு இருந்தான். பட், லயா யூ.எஸ் போனான்றதை தவிர அவனுக்கு வேற ஒன்னும் தெரியால… சோ நான் அமெரிக்கால என்னோட பிஸ்னஸ் சர்க்கிள்ல விசாரிச்சேன். அதுலயும் எனக்கு எதுவும் பெருச தெரியல. அதனால் பிஸ்னஸ் விஷயம அமெரிக்கா போறேன்னு பொய் சொல்லிட்டு, நானே அங்க போய் விசாரிச்சேன். அப்ப தான்" என்றவர் கண்களில் கண்ணீர் பெருகியது. "அம்மா ப்ளீஸ் அழதீங்க… ப்ளீஸ்" என...