இதயம் இறுதி அத்தியாயம்
இறுதி அத்தியாயம் அவன் கண்களோ அந்த இடத்தில் நின்றவளை கூர்ந்து பார்க்க, அவன் மனமோ ‘அவள் உண்மையாக அவன் கண்முன் தான் நிற்கிறாளா? இல்லை அது வெறும் காட்சிப் பிழையா? தன் கண்கள் காண்பது உண்மை தானா?’ என்று அவன் மனம் சிந்தித்துக் கொண்டிருக்க, அவனையும் அறியாமல் அவன் கால்கள் அவளை நோக்கிச் சென்றது. அதற்குள் அவள் அங்கிருந்து நகர, அவனும் அவளைத் பின் தொடர்ந்தான். அந்த நேரம் அதீஷன் அங்கு வர, “அதீ… தன்வி உள்ள இருக்கா, நீ அவளைப் பார்த்துக்க” என்றவன், “டேய் தர்ஷா… நீ எங்க போற?” என்று கேட்டதைக் கூடக் காதில் வாங்காமல் அங்கிருந்து வேகமாக ஓடிச் சென்றான். வேகமாக அவளின் பின்னால் தன் வாகனத்தை விரட்டிச் சென்ற ஆதர்ஷ், அவள் ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்திற்குள் செல்வதைப் பார்த்து அவளைப் பின்தொடர்ந்து சென்றான். அவள் ஒரு வீட்டின் உள் செல்வதைப் பார்த்தவன், அவள் உள்ளே சென்று கதவை அடைக்கும் முன் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல, திடீரென நடந்த நிகழ்வில் கண்கள் விரிய அதிர்ந்து நின்றாள் தர்ஷினி. ஆதர்ஷனைப் பார்த்து தர்ஷினி அதிர்ந்து நிற்க, ஆதர்ஷனோ அவளைத் தன் பார்வையால் எரித்துக் கொண்டிருந்தான். “நீங்க...” ...