Posts

கன்னத்தில் காதல் முத்தம் 2

 காதல் 2 'வீக் எண்ட்' என்று இளைஞர்களால் அழைக்கப்படும் வார விடுமுறை நாள் நாளை என்பதைக் கூட மறந்து அந்த வெள்ளிக்கிழமை நாளில், அலுவலகம் பரபரப்பாக இருக்க, அங்கு வேலை செய்யும் சில ஆட்கள் முகத்தில் ஒருவிதப் பீதியுடன் அந்த 'கான்பரன்ஸ்' அறையின் வாசலைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். 'கான்பரன்ஸ்' அறையின் கதவைத் திறந்து கொண்டு கௌதம் உள்ளே வர,‌ கௌதம் பின்னால் வேகமாக நடந்து வந்த அவன் கால் ‘ஷூ’ வின் சத்தமே அங்கிருந்தவர்களின் மனதில் பயத்தைக் கிளப்பியது. ஆறடி உயரத்தில் மாநிறத்திக்கு சற்று கம்மியான நிறம் தான் என்றாலும், அதுவும் அவனுக்கு அழகாகத் தான் இருந்தது. தீர்க்கமான கருப்பு வைரம் போன்ற கண்கள், அதில் எப்போதும் ஒரு அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும். எந்தவித கெட்ட பழக்கம் இவனுக்கு இல்லை என்று சொல்லாமல் சொல்லும் இளஞ்சிவப்பு நிற உதடுகள், நுனியில் கோபத்தை சுமந்திருக்கும் கூர் மூக்கு, 'சிக்ஸ் பேக், எய்ட் பேக்' என்றெல்லாம் இல்லாமல், ஒழுங்காக உடற்பயிற்சி செய்து உடலை உறுதியாக ஆரோக்கியமாக வைத்திருந்தான். எப்போதாவது சிரித்தால் அத்தி பூத்தாற்போல், அவன் வலப்பக்கம் விழும் ஆளை இழுக்கு...

கன்னத்தில் காதல் முத்தம் 1

  காதல் 1 காலை வேளையில்‌ விடிந்தும் விடியாமல் இருந்த வானத்தில், சூரியன் இருக்கிறானா? இல்லையா? என்று தேடும் அளவுக்கு,‌ மார்கழி மாதத்தின் பனி மெல்லிய திரையாக படர்ந்து வெளிச்சத்தை மறைத்துக் கொண்டிருந்த நேரம், அந்த வீட்டின் பூஜை அறையில் ஒலித்துக் கொண்டிருந்த சுப்ரபாதத்தின் சத்தம் மெலிதாக மாடிப்படி ஏறி, தட்டாமல் கதவைக் கடந்து சென்று, அமைதியான சூழலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பெண்ணவள் காதுகளில் செல்லமாகச் சிணுங்க, கண்களை மூடியபடியே மெல்லிதாக அவள் இதழ்கள் விரிந்தது. கைகளை நீட்டி சோம்பல் முறித்தபடி மெல்லப் புரண்டு படுத்தவள், மெதுவாகக் கண்களைத் திறந்தாள். அவள் ஆராத்யா பிரியதர்ஷினி. கண்விழித்தவளின் பார்வையில் அங்குச் சுவரில் மாட்டி இருந்த கடிகாரம் விழுந்தது. அந்த கடிகாரம் இப்போது காலை மணி ஆறு என்று காட்டியது. சட்டென அதிர்ந்த படி போர்வையை விலக்கி விட்டு எழுந்து மெத்தையில் பொத்தென்று உட்கார்ந்தவள், "ச்சீ மணி ஆறு தான் ஆகுது அதுக்குள்ள முழிச்சிட்டேனே…" என்று தலையில் கைவைத்துக் கொண்டு அமர்ந்தாள். "எல்லா இந்த அத்தையால வருது. விடியக் காலையில் இப்டி சுப்ரபாதம் போடாதீங்க… போடாதீங்கன்னு ஆய...

இறுதி அத்தியாயம்

  இறுதி அத்தியாயம்  மாலைப்பொழுது வீடு திரும்பிய சந்தியாவுக்கு வீட்டுக்குள் யுக்தாவின் குரல் கேட்க, ‘அய்யோ கடவுளே! யுக்தா அக்கா குரல் கேக்குது… இந்நேரம் அவங்க மேட்டரைப் போட்டு உடைச்சிருப்பாங்க… எல்லாப் பிசாசும் சேர்ந்து என்னை ஓட்டு ஓட்டுன்னு ஓட்டப்போகுது. நீதான் காப்பாத்தனும்’ என்று வேண்டிய படியே உள்ளே சென்றாள். அமைதியாக நல்லபிள்ளை போல் முகத்தை வைத்துக்கொண்டு இருந்த சந்தியாவையே கூர்ந்து பார்த்த யுக்தா, “சோ… மேடம் வேலையை ரிசைன் பண்ணிட்டீங்க, ம்ம்ம்… அடுத்து என்ன செய்யப்போறதா உத்தேசம்?” என்று கேட்க, சந்தியா திருதிருவென விழித்தபடி இருந்தாள்‌. அவள் அருகில் வந்த தேவி, “வேற என்ன? சீக்கிரம் தேவாவைக் கல்யாணம் பண்ணிட்டு புள்ளை குட்டின்னு செட்டில் ஆகிடுவா…” என்று சொல்ல, சந்தியாவின் கன்னங்கள் சிவந்த விட்டது. “அக்கா ப்ளீஸ், சும்மா இருங்க…” என்றவளின் கன்னத்தைக் கிள்ளிய தேனு, “ஏய்… ஏய் இங்கப் பாருங்கடி, நம்ம பிடாரிக்குக் கூட வெக்கம் எல்லாம் வருது.” என்றுச் சொல்ல, “அக்கா…” என்று சிணுங்கிய சந்தியா, “மாமா, பாருங்க உங்க பொண்டாட்டிய?” என்று அர்விந்தைத் துணைக்கு அழைத்தாள். அவனோ, “சாரிடா… இது உங்க ...

உன் விழியில் கைதானேன் 23

  விழி 23 ஒரு பக்கம், தான் தேவாவுடன் சேர்ந்து வாழ்ந்தால் பின்னாளில் தன் வேலையில் அதை வைத்து மற்றவர்கள் தன் நேர்மையைச் சந்தேகப் படுவார்கள் என்று நினைத்து மறுகியவள், தன் குடும்பத்திற்கும் அவனைப் பிடிக்கவில்லை என்று தெரிந்த பிறகு மொத்தமாக உடைந்து விட்டாள். நடந்த கல்யாணத்தால் ஏற்கனவே தன் குடும்பம் பட்ட கஷ்டமும் அவமானமும் போதும் என்று நினைத்தவள், தன் காதலைத் தன்னுள்ளேயே புதைத்துக் கொண்டவள், இனித் தன் வாழ்க்கையில் தேவாவைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்பதையும் முடிவு செய்து கொண்டாள். நாள்கள் அதன் போக்கில் செல்ல, மீண்டும் ஒரு கேஸூக்காகச் சந்தியா பெங்களூர் போய்விட, அந்த நேரம் தேவாவும் விடுதலையாகி வெளியே வந்திருந்தான்.  சென்னையில் அருள் தொழில் தொடங்கியது தெரிந்து, “உங்களை யாரு மாமா இங்க பிசினஸ் ஸ்டார்ட் பண்ணச் சொன்னது.” என்றவனுக்கு இங்கே இருந்தால் எங்கே தன் கட்டுப்பாட்டையும் மீறிச் சந்தியாவைப் பார்க்கச் சென்று விடுவோமோ என்ற பயமிருக்க, முதலில் அருள் மேல் கோபம் கொண்டவன், குறைந்தபட்சம் அவளிருக்கும் ஊரில் இருக்கும் நிமமதியாவது தனக்குக் கிடைக்கட்டும் என்று நினைத்தவன் அதன் பிறகு அமைதியாகி...

உன் விழியில் கைதானேன் 22

  விழி 22 அந்த வீடே அமைதியாக இருந்தது. அடுத்து என்ன என்று யோசிக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தனர் அனைவரும். கலைவாணி மட்டும் அழுதுகொண்டே இருந்தவர், “இப்படி ஆகிடுச்சே… இனி இவ வாழ்க்கையை எப்படிச் சரிபண்ணப் போறேன்.” என்று அழுது புலம்பியபடியே இருந்தவரை யாராலும் தேற்ற முடியவில்லை. அன்றைய தினம் திடீரென வீட்டுக்கு வந்த ஆகாஷ் குடும்பத்தைப் பார்த்து ஒரு நிமிடம் தடுமாறிய சூர்யா, அடுத்த நொடி தன்னைச் சுதாரித்துக் கொண்டு, “வாங்க… வாங்க ஆகாஷ்.” என்று அவர்களை வரவேற்று அமர வைத்தவன், “நானே உங்களை வந்து பார்த்துப் பேசணும்னு நினைச்சிட்டு இருந்தேன்‌.” என்று சொல்ல, “இனி அதுக்கு எந்த அவசியமும் இல்ல.” என்றான் ஆகாஷ் இறுகிய குரலில். அவன் சொன்னதைக் கேட்டு உள்ளுக்குள் அதிர்ந்த கலைவாணி, “அது மாப்பிள?” என்று ஏதோ சொல்லவர போதும் என்பது போல் கை காட்டிய ஆகாஷ், “எனக்கு நடந்த எல்லா விஷயமும் தெரியும்.” என்றவன், “நாங்க இப்ப இங்க வந்ததே இனிமே இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிட்டுப் போகத்தான்.” என்று சொல்ல அனைவருக்கும் நெஞ்சம் பதறியது என்றால், சந்தியா மட்டும் ஆகாஷை நிதானமாகப் பார்த்த...