இடுகைகள்

ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன் விழியில் கைதானேன் 17

  விழி 17 தேவா வீட்டுக்குச் சந்தியா வந்து முழுதாக ஒருநாள் ஓடியிருந்தது. நாள் முழுவதும் அறையிலேயே அடைந்து கிடக்கும் சந்தியாவைப் பார்த்த தேவாவுக்கு மனது பிசைந்தாலும், ஒரு பக்கம் ஏனோ அவன் மனதில் சொல்ல முடியாத ஒரு அமைதி நிலவியது, அவன் மட்டுமே அறிந்த உண்மை.  அவளுக்குத் திருமணம் நிச்சயமாகி விட்டது என்று தெரிந்தபோது, அவன் உள்மனம் உணர்ந்த வலி அவனுக்கு மட்டும் தான் தெரியும். பின்பு தன் நிலை உணர்ந்தவன் எங்கிருந்தாலும் அவள் நன்றாக இருந்தால் போதுமென்று நினைத்து அவன் உணர்வுகளைத் தனக்குள் அடக்கி அணைகட்டி வைத்திருக்க, தீனா அவனின் வார்த்தைகளால் அந்த அணையைத் தகர்த்திருந்தான்.  தீனா அழைத்தபோது எங்கு அவளுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்று அவன் இதயம் துடித்தது. அங்குச் சென்று அவளை நல்லபடியாய் பார்த்த பிறகுதான் அவனுக்கு மூச்சே வந்தது. அப்போதும் கூட அவனுக்குச் சந்தியாவைத் தன் வாழ்க்கையில் இணைக்கும் எண்ணம் இல்லை. ஆனால், தீனா கடைசியாகச் சொல்லிச் சென்ற வார்த்தைகளைக் கேட்டவனுக்கு, அதற்கு மேல் வேறு எதையும் நினைக்கத் தோன்றவில்லை. நேராக அவளை இழுத்துச் சென்று தாலியைக் கட்டி, அவளின் ஆயுளுக்கு, அவளுக்குப் பாதுகாப்பாகத் தன்

உன் விழியில் கைதானேன் 16

  விழி 16 அன்றைக்கு மறுநாள் கோவில் திருவிழா நடக்க இருக்க, பாதி ஊர் அந்தக் கோவிலில் தான் கூடி இருந்தது.  அன்றைக்கும் கீர்த்தியின் தந்தைக்கு உதவியாகக் கீர்த்தி, சந்தியா‌ இருவரும் கோவிலுக்கு வந்திருந்தனர். அன்றைய கோவில் திருவிழாவுக்குக் கோவிலுக்கு வந்திருந்தவனின் கழுகுக் கண்களில் அங்கிருந்த ஆள்களை வேலை வாங்கிக் கொண்டிருந்த சந்தியா விழுந்தாள். சாராயக் கேஸில் ஜெயிலுக்குச் சென்றிருந்த தீனா, தன் பணத்தை வைத்து அந்தக் கேஸிலிருந்து தப்பி இருந்தான்.  பார்ப்பதற்குக் கொள்ளை அழகாக இருந்தவளை விட்டு இம்மியளவும் நகரவில்லை தீனாவின் கண்கள். “யாருடா இவ? பார்க்க செம்மயா இருக்கா? இந்த ஊர்ல இருந்துட்டு இதுவரை என் கண்ணுல படாம இருந்திருக்காளே?” என்றவனின் பார்வை போன திசையில் இருந்த சந்தியாவைப் பார்த்த தீனாவின் கையாள்,  “அண்ணா இந்தப் பொண்ணு அந்த தேவாவோட ஆளு” என்றுச் சொல்ல, தீனா சட்டென அவனைத் திரும்பிப் பார்த்து அவன் சட்டையைப் பிடித்தவன், “நீ சொல்றது உண்மையாடா” என்று ஆக்ரோஷமாகக் கேட்க அவனும், “ஆமா ண்ணா‌… எனக்கு நல்லாத் தெரியும். அன்னைக்கு இந்தப் பொண்ணு, அந்தத் தேவாகூட இந்த ஊருக்குள்ள வந்ததை நான் பார்த்தேன். அதுக்

உன் விழியில் கைதானேன் 15

  விழி 15 சந்தியா அந்த ஊரில், ஒரு இடம் விடாமல் கீர்த்தியுடன் சுற்றித் திரிந்தாள். இன்னும் மூன்று நாட்களில் அந்த ஊர் அம்மன் கோவிலில் ஆடிமாதத் திருவிழா இருக்க, அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருந்தது. கீர்த்தியின் தந்தை கோயிலில் பூ அலங்காரம் செய்யும் பொறுப்பை ஏற்றிருக்க, அவருக்கு உதவியாகக் கீர்த்தியுடன் வந்திருந்தாள் சந்தியா. அலங்காரத்திற்குத் தேவையான பூக்கள் வந்திருக்க சந்தியா, அதை வண்டியில் இருந்து கீழே இறக்கி வைத்துக் கொண்டு இருந்தவள் அங்கு தேவாவைப் பார்க்க, “ஹலோ எல்லச்சாமி” என்று கத்தி அழைத்தாள்.  அவள் குரலில் சட்டெனத் திரும்பிப் பார்த்தவன் கண்கள் இரண்டும் அவளைப் பார்த்தது பார்த்தபடியே அப்படியே வியந்து நின்றது.  பாவாடை, தாவணியில் பச்சரிசிப் பற்கள் தெரிய அழகாகச் சிரித்தபடி நின்றவளின் கோலத்தில் சித்தம் கலங்கித் தான் போனான் ஆணவன், ஒரு நிமிடம். அடுத்த நிமிடமே அவள் வேறொருவருக்கு நிச்சயம் செய்த பெண் என்ற நினைவு வர, தன் தலையை உலுக்கி அவன் மனதை நிலைபடுத்தியவனை, “எல்லச்சாமி, இங்க கொஞ்சம் வாங்க” என்ற சந்தியாவின் அழைப்பு அவளை நோக்கிச் செல்ல வைத்தது. “என்ன வேணும்? எதுக்குக் கூப்பிட்டிங்க?” என்றவன

உன் விழியில் கைதானேன் 14

  விழி 14 அடுத்து வந்த இரண்டு நாள்களும் அமைதியாகவே சென்றது. அன்று காலை உறங்கிக் கொண்டிருந்த தேவாவின் அறைக்கதவைப் பலமாகத் தட்டினான் ரகு. கண்களைக் கசக்கியபடியே எழுந்த தேவா, கடிகாரத்தைப் பார்க்க அதில் காலை எட்டு மணி என்று காட்டியது. “என்ன இது, இன்னைக்கு இவ்ளோ நேரம் தூங்கிட்டேன்” என்றபடியே எழுந்து வந்து கதவைத் திறந்த தேவா, முகம் முழுவதும் மகிழ்ச்சியோடு கையில் இனிப்புடன் இருந்த ரகுவைப் பார்த்தான். “என்னடா?” என்று கேட்க அவன் வாயில் இனிப்பைத் திணித்தான் ரகு. “டேய்… டேய்…” என்று அவனைத் தடுத்தவன், “இன்னும் பிரஷ் கூடப் பண்ணலடா” என்றவனைக் கட்டிப்பிடித்த ரகு, “அண்ணா நம்ம ரொம்ப நாளா நினைச்சிட்டு இருந்தது இன்னைக்கு நடந்திடுச்சு” என்று குதூகலமாகச் சொல்ல அவனைப் புரியாமல் பார்த்த தேவா, “என்னடா ஆச்சு? முதல்ல விஷயத்தைச் சொல்லு” என்றான். “அண்ணா, அந்த தீனாவோட சாராயம் காய்ச்சுற இடம் மொத்தமும் போலீஸ் வந்து சீஸ் பண்ணிடுச்சு. அந்த தீனாவையும், அவன் ஆளுங்களையும் அரஸ்ட் பண்ணிட்டாங்க… அந்த எம்.எல்.ஏவால கூட ஒன்னும் செய்ய முடியல…” என்று சொல்லத் தேவா திகைத்து நின்றான். “எப்படி? என்னன்னு தெரியல, இன்னைக்கு மார்னிங் ஒரு

உன் விழியில் கைதானேன் 13

  விழி 13 சந்தியா அந்த ஊருக்கு வந்து இரண்டு நாள்கள் கழிந்திருந்தது. தன் தோழி கீர்த்தியுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, கதையடிப்பது, சாப்பிடுவது, தூங்குவது என்று படு பிஸியாகச் சென்று கொண்டிருந்தது அவளின் நாள்கள். “அடியே கீர்த்தி, உங்க ஊர் செமையா இருக்கு… எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எனக்கு மட்டும் நிச்சயம் ஆகாம இருந்திருந்தால் பேசாம இந்த ஊர்லயே ஒரு பையனைக் கரெக்ட் பண்ணி மேரேஜ் பண்ணி இங்கயே செட்டில் ஆகியிருப்பேன்.” என்று சிலாகித்துச் சொல்ல அவளைப் பார்த்துச் சிரித்த கீர்த்தி, “யாரு நீயி… இந்த ஊர்ல… அடிப்போடி சும்மா. நீயாவது உன் குடும்பத்தை விட்டுட்டு இவ்ளோ தூரம் வர்றதாவது. அவங்களைப் பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு தானே, வந்த பாதி மாப்பிள்ளையை வேணாம்னு சொல்லி விரட்டி விட்ட நீ… அப்படிப்பட்ட நீ இந்த ஊர்ல வாக்கப்படப் போறியாக்கும்.” என்று சொல்ல, சந்தியா சிரித்தபடி தலையாட்டியவள், “அதுவும் உண்மை தான். என்னோட பலம், பலவீனம் ரெண்டுமே என்னோட குடும்பம் தான். அதுவும் நிலாக்கா, தேனக்கா, தேவியக்கா பசங்க எல்லாம் என்மேல அவ்ளோ பாசமா இருப்பாங்க, தெரியுமா? இந்த ரெண்டு நாள்ல ஐ மீஸ் யூ ன்னு அவ்ளோ மெசேஜ்.” என்றவளுக்

உன் விழியில் கைதானேன் 12

 விழி 12 காலையும் மதியமும் கலந்த பொழுதில், வெயில் மிதமாகக் காய்ந்து கொண்டிருக்க, இரண்டு பக்கமும் தென்னந்தோப்புகள் இருந்த வழியாகச் சென்று கொண்டிருந்தது அந்தப் பேருந்து. காதில் இருந்த இயர் போனில் ஏ.ஆர். ரஹ்மான் பாட்டைக் கேட்டபடியே, ஜன்னல் வழியாக வெளியில் தெரிந்த இயற்கைக் காட்சிகளையும் ரசித்தபடி வந்தாள் சந்தியா. அப்போது அவளது அலைபேசி அடிக்க, அதை எடுத்துப் பார்த்தவள் முகத்தில் லேசான புன்னகை மலர்ந்தது. ப்ளூடூத் வழியாக அழைப்பை ஏற்றவள், “சொல்லுங்க ஆகாஷ்” என்றாள். “சேஃபா ஊருக்குப் போயிட்டியா சந்தியா? ட்ரெயின் கரெக்ட் டைமுக்கு ரீச் ஆகிடுச்சா?” என்று கேட்டான் ஆகாஷ். “ம்ம்ம், ஊருக்கு வந்தாச்சு ஆகாஷ். இப்ப பஸ்ல போயிட்டு இருக்கேன். என் ஃப்ரெண்டோட அப்பா என்னை பஸ் ஸ்டாப்புல வந்து பிக் பண்ணிக்குவாரு… வீட்டுக்குப் போயிட்டு கால் பண்றேன்” என்றவள் மேலும் இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவள், தன் விரலில் இருந்த ஆகாஷ் போட்டுவிட்ட தங்கள் நிச்சயதார்த்த மோதிரத்தை வருடிக் கொண்டாள். ஆகாஷ் சென்னையில் பிரபலமான வக்கீல். பெரிய குடும்பத்தின் மூத்த வாரிசு. சந்தியாவை ஒரு திருமண விசேஷத்தில் பார்த்துப்