இதயம் 10
இதயம் 10 அவன் பேசிவிட்டுச் சென்று அரைமணி நேரம் கடந்த பிறகும், அழுதபடியே இருந்த தர்ஷினியைப் பார்த்த ஆதர்ஷனுக்கும் உள்ளுக்குள் வலிக்கத் தான் செய்தது. அவளுக்குத் தன்மீதான காதல் எந்தளவுக்கு மனதில் வியாபித்து இருக்கிறது என்பதை நேற்றைய சம்பவம் அவனுக்கு நன்றாகவே உணர்த்தி இருந்தது. அவனுக்கு அவள் காதல் புரிந்தது, சொல்லப் போனால் அவளால் தான் காதலிக்கப் படுகிறோம் என்ற உணர்வையே அவன் வெகுவாக ரசித்தான். அவளை அவனுக்குப் பிடிக்கும், அவள் காதலும் பிடித்துத்தான் இருந்தது. ஆனால், அவனுக்கு அவள் மீது காதல் இருக்கிறதா? என்று அவனுள் தேடிப் பார்க்க மட்டும் அவன் தயாராக இல்லை. அப்படித் தேடினால் அதற்கு என்ன பதில் கிடைக்கும் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அந்தப் பதிலில் அவனுக்கு உடன்பாடு இல்லை என்பதால், தர்ஷினியைத் தன்னை விட்டுத் தள்ளி வைப்பது தான் சரியென்ற முடிவுக்கு வந்துவிட்டான். நேராகத் தர்ஷினியிடம் சென்றவன், “டைம் ஆச்சு… கிளம்பு. பீட்டர் வந்துட்டு இருக்காரு” என்றான் இறுகிய குரலில். முகத்தை மூடி அழுது கொண்டு இருந்தவள், தீடிரெனக் கேட்ட அவன் குரலில் அதிர்ந்து எழுந்தவள், அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள