ஆழியின் ஆதவன் 26
ஆழி 26 ஆதவன் கைகளைக் கட்டிக்கொண்டு கடலை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க, விஷ்ணுவும் முகிலும் அவன் அருகில் வந்தனர். "இவங்க மூணு பேருக்கும் திடீர்னு என்னச்சினே தெர்ல… யுக்தா பேரை கேட்டு ஏன் இப்டி ரியாக்ட் பண்றாங்கனே புரியல, ஏற்கனவே அவங்களை தெரியுமான்னு கேட்ட அதுக்கும் பதில் இல்ல, ம்ம்ம்… ஒன்னும் புரிய மாட்டுது" என்ற முகிலை திரும்பி பார்த்த ஆதவன், "நான் நினைக்குறது சரின்னா யுக்தாவை இவங்களுக்கு இதுக்கு முன்னையே தெரிஞ்சிருக்கணும். யுக்தாகும் இவங்களை கண்டிப்பா தெரிஞ்சிருக்கணும். யுக்தா பேரை கேட்டதும் ஆழி முகத்துல தெரிஞ்ச மாற்றமே அதுக்கு சாட்சி. ஆனா இது நல்லாத கெட்டதன்னு தான் தெரியல. எங்க எந்த சூழ்நிலையில் இவங்க மீட்டிங் நடந்துன்றதை பொறுத்து தான் இனிமே இங்க எல்லாமே நடக்கும்." "யு ஆர் ரைட் ஆதவ். பட் ஆழி கடைசிய சொன்னதை நீ கவனிச்சியா? நாங்கன்னு சொன்னவ மீரா, சைத்துவை பாத்த அப்றம் நான் இங்கிருந்து போய்டணும்னு சொன்ன… சோ அதுக்கு அர்த்தம் மீராவும் சைத்ராவும் இங்க இருந்த யுக்தாவால அவங்களுக்கு எதுவும் ஆகாது தானே?." "எஸ் முகில், நீ சொல்றதும் சரிதான். மீரா, சைத்ரா