அழகி நிறைவு பகுதி
அழகி 33 ஜீவாவின் கண்ணில் போன ஜீவன் மீண்டும் சுடர் விட்டு ஒளிர்ந்தது. "டேய் ஆதி… சாம் உன்னோட கையை இறுக்கி புடிச்சிருக்காடா. அப்ப அவளுக்குக் கான்ஷியஸ் வந்திடுச்சுன்னு தானே அர்த்தம்?" என்றவன் ஹாஸ்பிடல் என்றும் பாராமல் சந்தோஷத்தில் சத்தமாகக் கத்தினான். ஆதியின் உயர்ந்து இருந்த இடது கையை மயக்கத்திலும் இறுக்கி பிடித்திருந்தாள் யுக்தா. "என் பொண்டாட்டி என்னைத் தனியா விட்டு போக மாட்டானு, நான் தான் சொன்னேனே டா… அவ எப்பவும் சொன்ன வார்த்தையை காப்பாத்துவா. அவ திரும்பி என்கிட்ட வருவான்னு எனக்குத் தெரியும்!" என்றவன் தன் கையைப் பிடித்திருந்த யுக்தா கையில், தன் முரட்டு இதழ்களை மென்மையாகப் பதித்தான். முழுதாக எட்டு மணிநேரம் எடுத்தது யுக்தா கண் விழித்துச் சுய உணர்வுக்கு வர. மெதுவாகக் கண்விழித்தவள் முன் மொத்த குடும்பமும் அழுது வடிந்து நிற்க, ஆதித் மட்டும் அடக்க முடியாத கோவத்தைத் தன் கண்களில் தேக்கி வைத்து அவனவளை முறைத்துக் கொண்டிருந்தான். சிவகாமி பாட்டி வேகமாக யுக்தா அருகில் வந்து அவள் காதை மெதுவாகப் பிடித்துத் திருகியாவர், "ஏன்டி ராங்கி? நீ அடங்கவே மாட்டியா டி? வீட்ல இத்தனை பேர்