ஆழியின் ஆதவன் Epilogue
EPILOGUE இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ஆதவன் வீடு முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. திடீரென்று "அண்ணா" என்று மேலிருந்து கத்தும் ஓசை கேட்க, விஷ்ணுவும் முகிலும் பாய்ந்து மாடிக்கு ஓடிச்சென்று கதவை திறந்து பார்க்க, அங்கு கண்களில் இருந்து கண்ணீர் வழிய முகத்தை பாவம் போல் வைத்திருந்தவள் முகத்தை பார்த்ததும் இருவரும் ஆதவ் மீது பாய்ந்தனர். "டேய் என்ன பண்ண அவள, ஏன் அவ அழுகுறா… அதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன், நான் என் தங்கச்சிய என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு… நீ தான் எம் பொண்டாட்டி என்கூட தான் இருப்பா, நான் அவளை கண்ணுக்குள்ள வச்சி பாத்துக்குறேன்னு சொல்லிட்டு, இப்ப அவளை கண்கலங்க வச்சிருக்க ராஸ்கல்… இது சரிபட்டு வராது… நான் இப்பவே என் தங்கச்சிய என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்" என்று விஷ்ணு குதிக்க, ஆதவ் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான். "டேய் ச்சீ அடங்கு… மொதல்ல இங்க என்ன நடந்ததுன்னே உனக்கு தெரியாது… நீயா ஒன்ன நெனச்சிட்டு சும்மா தைய்யதக்கான்னு குதிச்சிட்டு இருக்க. முதல்ல உன் அருமை தங்கச்சி கிட்ட, அவ எதுக்கு அழறான்னு கேளு" என்றவன் அவளிடம் திரும்பி,