ஆழியின் ஆதவன் 17
ஆழி 17 ஆழி கையில் ஆவி பறக்கும் டீயுடன், அவன் ஆவியை எடுக்கும் ஆயுதத்தை எடுத்துக் கொண்டு வந்தாள். "இந்தாங்க சார் டீ, தலை வலிக்குதுன்னு சொன்னீங்க இல்ல, இந்தாங்க இந்த மருந்தை போடுங்க எல்லாம் பறந்து போய்டும்" என்று டீயும் கூடவே ஒரு கேப்சூல் மாத்திரையையும் அவன் கையில் கொடுக்க, இடித்துக்கொண்டே அந்த கேப்சூலை வாயில் போட்டுக்கொண்டு, டீயை ஒரு வாய் குடித்த விமல், "ஏங்க டீ சூப்பரா தான் இருக்கு… என்னை உள்ள கூப்பிடாம அவாய்ட் பண்ண, வேணும்னு தானே பொய் சொன்னீங்க" என்று ஏதோ பெரிய ரகசியத்தை கண்டு பிடித்தது போல் அட்டகாசமாகச் சிரிக்க, ஆழி அவன் கேவலமான சிரிப்பை சகிக்க முடியாமல் முகத்தை திருப்பிக் கொண்டு, "அய்யோ அப்படி எல்லாம் இல்லீங்க சார், சும்மா ஒரு சேஃப்டிக்கு தான். இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியல இல்ல, அதோட இது தனி வீடு வேற, இங்க இருந்து கத்துனா கூட யாருக்கும் கேக்காது, உதவிக்குக் கூட யாரும் இல்ல, அதான்…" என்றவளை வக்கிரமாக துகிலுரிக்கும் பார்வை பார்த்தபடியே எழுந்து ஆழியை நோக்கி நடந்த விமல், "நீ சொல்றது உண்மைதான் ப்யூட்டி, காலம் கெட்டுதான் கெடக்கு. ஆனா பாரு இவ்ளோ