ஆழியின் ஆதவன் 10
ஆழி 10 ஆழி வீட்டுக்குள் நுழையவும் ஆதவ் அவன் அறையில் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. "என்ன ஆழி மேடம், வரவர நீங்க அடிக்கடி வெளிய போறீங்க, ரொம்ப நேரம் கழிச்சு தான் வீட்டுக்கு திரும்பி வரீங்க… என்ன மேட்டர்?" என்று கேட்க, அங்கு வந்தார் வெண்மதி. "டேய் ஏன்டா எப்பப்பாரு அவளையே நோண்டிட்டு இருக்க? உனக்கு வேற வேலையே இல்லையா? நீதான எப்பவும் சொல்லுவ அவ நிலாக்கு வெறும் கேர் டேக்கர் தான், அதுக்கு நான் சம்பளம் தரேன்னு... அப்படி இருக்க, அவளை கேள்வி கேக்குற உரிமைய உனக்கு யார் தந்தது?." என்ற தன் தாயை செல்லமாக முறைத்த ஆதவ், "என்ன பேசுறீங்கம்மா நீங்க, அவ இந்த வீட்ல தான தங்கி இருக்கா, அந்த உரிமையில் தான் கேட்டேன்." என்று சமாளிக்க, "அதெப்படி டா? அவ இங்க இருக்கனால உனக்கு உரிமை வந்துடுமா என்ன? அவ ஒன்னும் இந்த வீட்டு ஆள் இல்லயே, இந்த வீட்ல தங்கியிருக்கா அவ்ளோதான். ஆழி வெறும் பேயிங் கெஸ்ட் தான். நீ எப்படி மாச மாசம் அவளுக்கு சேலரி குடுக்கறியோ, அதே மாதிரி அவளும் இங்க தங்க வாடகை குடுக்குறாளே, சோ அவளை கேள்வி கேக்க உனக்கு எந்த ரைட்ஸ்சும் இல்லை" என்று வேண்டுமென்றே ஆதவ்