Posts

Showing posts from October, 2022

ஆழியின் ஆதவன் 27

  ஆழி 27 ஆழி அமைதியாக அமர்ந்திருக்க, அவள் மடியில் உறங்கிக் கொண்டிருந்தாள் குழந்தை வெண்ணிலா.  "என்னாச்சு ஆழி உனக்கு? ஏன் ஒரு மாதிரி இருக்க… இஸ் எவ்ரிதிங் ஓகே?" என்ற மீராவை நிமிர்ந்துப் பார்த்த ஆழியின் கண்கள் கலங்கி இருந்தது. "ஏய் ஆழி என்ன இது? எதுக்கு உன் கண்ணு கலங்குது" என்றபடி அவள் அருகில் வந்த சைத்ரா அவள் கண்ணைத் துடைத்து விட, அவள் கையை தன் கன்னத்தோடு அழுத்திக்கொண்டாள் ஆழினி. "ஏன் சைத்து இப்படி எல்லாம் நடக்குது… ஏன் அந்த யுவ்ராஜ் ஆஷாவை கொன்னான்? ஏன் ஆஷா இதயம் எனக்குள்ள துடிக்கணும்? ஏன் நிலா பாப்பா என் மேல இவ்ளோ பாசமா இருக்கணும்? ஏன் ஆதவ் என்னை விரும்பணும்… ?அவர் காதலுக்கு துளி கூட தகுதி இல்லைனு தெரிஞ்சு, ஏன் எனக்கு அவர் மேல... நேத்து நான் ஏன்‌ அப்டி?" என்றவள் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பிக்க, "ஏன் நிலாவும் ஆதவ்வும் என் வாழ்க்கையில வந்தாங்க...?" என்று மீண்டும் அழுதவள், குழந்தையை தூக்கிக்கொண்டு அவள் அறைக்கு சென்றுவிட, மீராவும் சைத்ராவும் ஒன்றும் புரியாமல் நின்றனர். "என்ன மீரா, ஆழிய பாத்தாச்சா?" என்று கேட்டபடி வந்த ஆதவை திரும்பி பார்த்த இ