இதயம் 5
இதயம் 5 ஆதர்ஷ் ஆஃபிஸ் கிளம்பிய உடனேயே தர்ஷினிக்கு ஃபோன் செய்திருந்தான் அதீஷன். “ஹலோ தர்ஷினி… தர்ஷன் கிளம்பிட்டான். கேர்ஃபுல்லா இருங்க… அங்க அவனைப் பார்த்ததும் உடனே முகத்தில் சந்தோஷத்தைக் காட்டிடாதீங்க… அவனை இப்ப தான் அங்க பார்க்குற போல காட்டிங்கோங்க… எக்காரணம் கொண்டும் உங்க முகத்துல நீங்க அவனை எதிர்பார்த்துட்டு இருந்தீங்கன்னு அவனுக்குத் தெரியவே கூடாது. அப்படி மட்டும் அவனுக்கு எதுவும் டவுட் வந்துச்சு… நம்ம மொத்த ப்ளானும் ஊத்திக்கும்… சோ ரொம்ப கவனமா இருங்க” என்று சொல்லி விட்டான். ’ம்க்கும்… அவருக்கு என்ன எதுவும் ரியாக்ட் பண்ணாதேன்னு சொல்லிட்டாரு…’ என்றவள், நெஞ்சைப் பிடித்துக் கொண்டு, ‘நான் சும்மா இருந்தாலும் இது சும்மா இருக்காதே… அவரைப் பார்த்ததும் கண்டமேனிக்கு குதிக்க ஆரம்பிச்சிடுமே… அதுவும் எட்டு வருஷம் கழிச்சு அவரைப் பார்க்கப் போறேன்…’ என்று சிணுங்கியவள், ‘கடவுளே, நீதான் எனக்குத் துணையா இருக்கணும். என் மனசைக் கொஞ்ச நேரம் என்னோட கன்ட்ரோல்ல வைக்க ஹெல்ப் பண்ணு’ என்று அனைத்து தெய்வங்களுக்கும் வேண்டுதல் வைத்துக் கொண்டிருக்க, அப்போது அங்கு ஓடிவந்த அந்தக் கம்பெனி மேனேஜர் ஜான், “மிஸ் தர்ஷி