ஆழியின் ஆதவன் 28
ஆழி 28 "என்ன மூணு பேர் முகமும் பேயை பார்த்த மாதிரி இப்டி வெளுத்து போயிருக்கு, ஏனி ப்ராப்ளம்? என்ற யுக்தாவின் குரலில் இயல்புநிலை வந்தவர்கள், "அதெல்லாம் ஒன்னு இல்ல யுக்தா, நாங்க நல்லா தான் இருக்கோம்" என்ற ஆதவன் குரலை செருமிக்கொண்டு, "சிட்டி கமிஷனர் சூசைட் தானா பண்ணிக்கிட்டாரு, நீ அதை கொ… கொலைனு சொல்றீயே?" என்ற ஆதவனை நிமிர்ந்து பார்த்த யுக்தா, "ஒருத்தர் அவருக்கு வாழ புடிக்கலைன்னு பண்ணிக்கறதுக்கு பேர் தான் தற்கொலை. யாரோ மிரட்டி அந்த மிரட்டலுக்கு பயந்து உயிரை விட்ட அதுக்கு பேர் தற்கொலை இல்ல ஆதவ் கொலை… இதுதான் கமிஷனர் கேஸ்ல நடந்திருக்கு." என்ற யுக்தாவின் பதிலில் நெஞ்சில் நீர் வற்றி போனது மூவருக்கும். "என்ன யுகி சொல்ற? அப்ப கமிஷ்னர் சூசைட் பண்ணிக்கலயா?" என்று ஆதி கேட்க, "அதை உன்னோட அருமை ப்ரண்ட்ஸ் கிட்ட கேளு ஆதி" என்ற பதில் அவள் கணவனுக்காக இருந்தாலும் அவள் அழுத்தமாக பார்வை மட்டும் ஆதவன், விஷ்ணு, முகில் மேலேயே இருந்தது. மனைவியை நன்கு புரிந்து வைத்திருக்கும் ஆதிக்கு அவள் சொல்ல வருவதை புரிந்து கொள்ள அதிக நேரம் தேவைப்படவில்லை. "சோ