அழகிய தமிழ் மகள் 17
அழகி 17 யுக்தாவும், நிஷாவும் அடுத்தடுத்து எடுத்த நடவடிக்கையில் கேஸ் அடுத்தக் கட்டத்துக்குச் சென்றது. லாப்டாப்பில் குறிப்பிடப்பட்டிருந்த அனைவரும் தற்கொலை செய்து கொண்டதாகக் கேஸ்கள் பதிவாகியது. அதைக் கொலையென்று நிரூபிக்க ஒரு சின்ன ஆதாரம் கூடப் போலிஸ்க்கு கிடைக்கவில்லை என்று அந்தந்த ஏரியா இன்ஸ்பெக்டர்கள் கமிஷனர் பரதன் மற்றும் ராமிடம் சொல்ல, "எப்படிக் கிடைக்கும்.இத செஞ்சவ லேசுபட்ட ஆளா என்ன? இன்னும் ஒரு வருஷம் உக்காந்து பூதக்கண்ணாடி வச்சு தேடினாலும் ஒரு எவிடன்ஸ்சும் கிடைக்காது…" என்று தனக்குள்லேயே சொன்னவர், "நீங்க இந்த எல்லாக் கேஸையும் சூசைட்ன்னு போட்டு க்ளோஸ் பண்ணுங்க. ஒரு எவிடன்சும் இல்ல, அதோட செத்துப் போனவங்க ஃபேமிலியும் கம்ப்ளைன்ட் தர விருப்பம் இல்லன்னு சொல்லீட்டாங்க. நம்ம வேற என்ன பண்ண முடியும்?" என்று அந்தப் பிரச்சனைக்கு அன்றோடு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் பரதன். யுக்தா அந்த லாப்டாப்பில் லாக் செய்யப்பட்டிருந்த போல்டரின் பாஸ்வோர்டை கிராக் செய்ய முயன்று கொண்டிருந்தாள். ராஷ்மி அனைவருக்கும் கேக் செய்து எடுத்து வந்தவள் யுக்தாவிடம் ஒரு கேக்கை கொடுக்கப் போக, "ஏய் ரா