அழகிய தமிழ் மகள் 14

 


அழகி 14


இரண்டு வருடங்களுக்கு முன்…

வீட்டில் மொத்த பேரும் ஹாலில் கூடி இருக்க, யுக்தா, நிஷா, ஜானவி, ராஷ்மி என்று நால்வரும் நடு ஹாலில் கைகட்டி நல்ல பிள்ளை போல் நின்றிருந்தனர்.

"ஏன்டி ராஷ்மி எள்ளு தான் எண்ணெய்க்குக் காயுது? நாம எதுக்குடி காயனும்… அதுங்க இரண்டு தான் உண்மைய மறைச்சி வச்சு இப்ப அது தெரிஞ்சு, பொறில மாட்டின எலி மாதிரி முழிக்குதுங்க... அதுக்கு ஏன் நம்மையும் குற்றவாளி கூண்டுல நிக்க வச்சிருக்காங்க?" என்ற ஜானுவை முறைத்த ராஷ்மி, "ம்ம்ம்… அப்படிக்கா திரும்பி அப்படியே ஒரு யூ டர்ன் போட்டு, உன் ஆளு முகரகட்டய கொஞ்சம் பாரு... அப்புறம் பேசு…” என்றாள்.


ஜானவி மெதுவாகத் திரும்பி ஓரக்கண்ணால் ஜீவாவை பார்த்தாள், அவன் முறைத்த முறைப்பில் பொத்தெனத் தலையைத் தொங்க போட்டவள், "ஏய் என்னடி இது?? இந்த மனுஷன் இப்படி முறைக்கிறாரு... இவரு பாக்குற பார்வையில ஒரு முட்டையை வச்சா தன்னால பொரிஞ்சு கோழிகுஞ்சு வெளிய வந்துடும் போல..." என்று ராஷ்மி காதை கடித்தவள், ஜீவா அருகில் இருந்த விஷ்ணுவை பார்க்க, அவன் கண்களும் வாட்டர்ஹீட்டர் போல் கொதித்துக் கொண்டிருந்தது.

"ஏய் ராஷ்மி… ஜீவா முறைக்கிறாரு சரி, விஷ்ணு ஏன்?" என்று புரியாமல் பார்த்தாள்.

"ம்ம்ம் அந்தக் கோழிகுஞ்சு எனக்காக..." என்ற ராஷ்மியை சட்டென நிமிர்ந்து பார்த்த ஜானு, "இது எப்போ டி நடந்துச்சு… சொல்லவே இல்ல?" என்று வடிவேலு ரியாக்ஷ்ன் கொடுக்க,

"அதெல்லாம் பார்த்த உடனேயே பத்திக்கிச்சு... அவன் லவ்வை சொன்னான், நாமளும் சும்மா தான இருக்கோம், இவனை விட்டா வேற இளிச்சவாயன் கிடைக்க மாட்டான்னு ஓ.கே. சொல்லிட்டேன். அதோட யுகிக்கு அண்ணியா வரதுன்னா கசக்குமா என்ன?? விஷ்ணு யுகிய விடப் பெரியவன் தான். ஆனால் யுகி தான் அவனுக்கு அக்கா மாதிரி. விஷ்ணுவை யுகியோட வளர்ப்புனே சொல்லலாம். சோ எனக்கு விஷ்ணு தான் பெஸ்ட் சாய்ஸ். நீயும் இந்த வீட்டுக்கு தான் மருமகளா வரப்போற... நிஷாவும் அனேகமாக இந்த வீட்டுக்கு தான் வரப்போறா... அப்படி இருக்க இப்படி ஒரு சான்ஸ்சை மிஸ் பண்ண நான் என்ன லூசா?" என்ற ராஷ்மி அதிர்ச்சியில் வாய்பிளந்து நின்ற ஜானுவின் வாயை, "கிளோஸ் தி டோர்" என்று அடைத்தவள், "மூடிட்டு வேடிக்கைய பாரு..." என்று விட்டு மீண்டும் நல்ல பிள்ளை போல் முகத்தை வைத்துக் கொண்டாள்

"நீங்க ரெண்டு பேரும் ரெண்டு வருஷமா சிபிஐல இருக்கீங்க அப்படித் தான?" என்று ராம் கண்களை இடுக்கி கேட்டான்.

யுக்தாவும், நிஷாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவர்கள் "ஆமாங்கண்ணா..." என்று தலையை மேலும் கீழும் ஆட்டினர்.

"ஏன்டி அதை இவ்ளோ நாளா எங்ககிட்ட சொல்லல?" என்று வினய் கோவமாகக் கத்த ஆரம்பித்திருந்தான்.

யுக்தா திரும்பி பரதனையும், வெற்றியையும் "ப்ளீஜ் ஹெல்ப்பு மீ..." என்று இதழை பிதுக்கி பாவமாகப் பார்க்க,

"ஏய் அங்க என்ன பார்வை அவங்களும் ஹீட் லிஸ்ட்ல தான் இருக்காங்க… இவங்க ரெண்டு பேருக்கும் எல்லா உண்மையும் தெரிஞ்சிருந்தும், இவ்ளோ நாளா ஒரு வார்த்தை கூடச் சொல்லல..." என்று ஜீவா தன் பங்கிற்குக் கடுகடுத்தான்.

"டேய் நாங்க என்ன டா செய்றது? இதுங்க பரிதிமாமா, ஆனந்தி அத்தைகிட்ட சத்தியம் வாங்குன மாதிரி எங்ககிட்டையும் அதுங்களைப் பத்தி ஒன்னும் சொல்லக் கூடாதுன்னு தலையில அடிச்சுச் சத்தியம் வாங்கிடுச்சு… நாங்க என்ன செய்ய?? வீ ஆர் கார்னர்டு..." என்ற வெற்றி, கயல்விழியைத் திரும்பி பார்த்து,

"கயல்ம்மா என்னம்மா பேசாம நிக்குற? கொஞ்சம் புருஷனுக்கும், அப்பாக்கும் சப்போர்ட் பண்ணு டா..." என்றவனை முறைத்த கயல்விழி,


"யோவ் நீ வாயா மூடுய்யா… இவ்ளோ நாள் ரெண்டு பேரும் என்கிட்ட கூட உண்மையைச் சொல்லல இல்ல... ரெண்டு பேரும் பேசாதீங்க… நாக்க புடிங்கி வெளிய போட்ருவேன். வாயை மூடிட்டு கம்முன்னு இருங்க..." என்று வெடித்தாள்.

வெற்றி வாயில் கைவைத்தவன், "என்னது யோவ்வாஆ??" என்று அதிர்ந்தான்.

"ஆமாய்யா…"

"நான் உன் புருஷன் டி…''

"இருந்துட்டுபோ அதுக்கென்ன இப்ப?" என்ற கயல்விழியை அதிர்ச்சியாகப் பார்த்த வெற்றி,

"புருஷன்ற மரியாதையும் போச்சு, கலெக்டர்ன்ற மரியாதையும் போச்சு... ச்சே இந்த ரெண்டு பிசாசால என் மரியாதை போச்சே..." என்று புலம்பியவன் திரும்பி பரதனை பார்த்தான். அவர் ஹெட்செட்டில் கேட்கும் பாட்டில் லயித்திருக்க, "சரி தான்..." என்ற வெற்றி அதுக்குப் பிறகு வாயே திறக்கவே இல்லை.

"டேய் அண்ணாஸ் நாங்க என்ன பண்றது? சூழ்நிலை அப்படி அமைஞ்சு போச்சு… நாங்க வேணும்ன்னு எதுவும் செய்யல. மும்பை காலேஜ்ல ஜாயின் பண்ற வரை, எங்களுக்கு ஐபிஎஸ் பண்ற ஐடியாவே இல்ல. ஆனால் காலேஜில நடந்த சில சம்பவங்கள் எங்களை இந்த முடிவு எடுக்க வைச்சிடுச்சு..." என்றவள் ஜானவியைப் பார்த்தாள்.

அவள் கண்கலங்கி தலை குனிய, அவள் நாடியில் கைவைத்து அவள் தலையை நிமிர்த்தி நிற்க வைத்தவள், "இந்த மாதிரி எங்களை மாதிரி எல்லாப் பொண்ணுங்களும் தலை நிமிர்ந்து நிக்கணும். அப்படி நிக்க வைக்க எங்களால முடிஞ்சதை செய்யணும்னு நெனச்சோம். அதுக்கு எங்களுக்குப் பவர் தேவைப் பட்டுச்சு. அதான் நாங்க ஐபிஎஸ் படிக்க முடிவெடுத்தோம். ஜானு லாயர், ராஷ்மி ஜர்னலிஸ்ட்னு எங்க பயணத்த ஸ்டார்ட் பண்ணோம்.


முதல்ல உங்ககிட்ட நாங்க ஐபிஎஸ்ல ஜாய்ன் பண்ணத மறைச்சதுக்குக் காரணம்?? போஸ்டிங் கிடைச்ச பிறகு யூனிபார்மோட வந்து உங்க எல்லாரையும் சர்ப்ரைஸ் பண்ண நினைச்சோம். அப்போ இருக்கும் போது டிரெய்னிங் சமயத்தில் வெற்றி அண்ணா எங்களைப் பார்த்துடுச்சு... அதான் யார்கிட்டையும் சொல்லக் கூடாதுன்னு சத்தியம் வாங்குனோம். ஆனால் எங்க விதி, ஐபிஎஸ் முடிச்ச உடனே ஒரு உத்தமர் எங்க ரெண்டு பேரையும் ஒரு அன்டர்கவர் மிஷன்ல போட்டு நார்த் இந்தியா பக்கம் சப்பாத்தி திங்க தொரத்திட்டாரு..." என்றவள் பரதனை பார்க்க, அவர், "யா இட்ஸ் மீ" என்று அசால்ட்டாகத் தோளை குலுக்கினார்.


யுக்தா செல்லமாக அவரை முறைத்தவள், "அந்த மிஷன் முடியவே எட்டு மாசம் ஆகிடுச்சு..." என்று இதழை பிதுக்கினாள்.


"சரி அந்த மிஷன் முடிஞ்ச அப்புறம் சொல்லிருக்க வேண்டியது தான டி?" என்ற மதுவை, அப்பாவி போல் பார்த்த நிஷா, "அங்க தான் விதி விளையாடிடுச்சு அண்ணி. விதி விளையாடிடுச்சு!!" என்று முகத்தைப் பாவம் போல் வைத்துக் கொண்டவள்,

"அந்த மிஷனை சுப்பர் டூப்பார முடிச்சதை கேட்ட சிபிஐ எஸ்பி, எங்க ரெண்டு பேரையும் அவர் டீம்ல அன்டர்கவர் ஏஜென்ட்டா ரெக்யூட்ட் பண்ணிடாரு அண்ணி. அப்படியே எங்க பிழைப்பு ஓடிடுச்சு அண்ணி... அப்போ தான் சிபிஐக்கு வந்த இந்தச் சென்னை கேஸ், யுகி கைக்கு வந்துச்சு... அதுக்காக அவ சென்னை வந்தா... அவ கூட அவ அசிஸ்டென்ட்டா நானும் வந்துட்டேன். இப்ப நீங்களே சொல்லுங்க அண்ணி… அண்டர்கவர்ல இருக்க நாங்க எப்படி அண்ணி எங்களைப் பத்தி வெளிய சொல்ல முடியும்? எப்படி அண்ணி முடியும்? எப்படி?" என்று வாயை பொத்தி குலுங்கி குலுங்கி அழ, யுகி ஆதரவாக அவள் முதுகை தடவியவள், அவள் காதோரம், "அடியேய் அடியேய் எமோஷனை குறை டி… ஓவர் ஆக்டிங் பண்ணி மொத்த குடும்பத்துக்கிட்ட மொத்து வாங்கிக் கொடுத்துடாத டி..." என்று மெதுவாக அவள் காதில் ஓதினாள்.

"ஏன் டி பார்பாமென்ஸ் ஓவராகிடுச்சா என்ன?"

"ம்ம்ம் பிண்ண ஐஞ்சு ரூவாக்கு நடிக்கச் சொன்னா ஐநூறு ஒவாய்க்கு நடிக்குற நீ... அடங்குடி…"

"அங்க என்ன சத்தம்??" என்ற ராம் குரலில் நிமிர்த்த யுக்தா, "சும்மா பேசிட்டு இருந்தோம்கணோய்..." என்க, மொத்த குடும்பமும் சிரித்து விட்டது. சிரித்த வாயோடு யுக்தா, நிஷா, ராஷ்மி, ஜானு நான்கு பேரை வெளுத்த கையோடும் அன்றைய தினம் அடிதடியோடு முடிந்தது.

யுக்தா தனக்காக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தன் ஆஃபிஸை அமைத்திருந்தாள், அங்கே தன் ரூமில் ஆறு மாதமாகக் கேஸ் பற்றி அவளும் நிஷாவும் சேகரித்த தகவல்களைப் படித்துப் பார்த்து முக்கியமான தகவல்களையும், ஃபோட்டோக்களையும், தன் இருக்கைக்கு முன்னிருந்த நோட்டீஸ் போர்டில் பின் வைத்து குத்திவிட்டு, அதை ஒரு முறை ஆழ்ந்து பார்த்தவள், டாக்டர் வினோத்தின் இறந்து கிடந்த ஃபோட்டோவை பார்த்து இழுத்து மூச்சி விட்டவள், "பாவம் நிஷா நம்ம ராஜீ… அவளுக்குன்னு இருந்தது, அவ அப்பா மட்டும் தான். இப்ப அவரும் இல்ல..." என்றவள் தன் சேரில் வந்து உட்கார்ந்தாள்.


"ஆமா யுகி... நல்ல மனுஷன்…! அவரோட சாவுக்குக் கண்டிப்பாக ஒரு நியாயம் கிடைச்சே ஆகணும். ஒரு வகையில அது நம்ம கடமையும் கூட..." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஜானவியும், ராஷ்மியும் வந்தனர்.


"என்ன ராஷ்மி நான் சொன்னதப் பத்தி விசாரிச்சியா?? என்ன ஆச்சு?"


"ம்ம்ம் விசாரிச்சிட்டேன் யுகி… நீ சொன்னது சரி தான். அந்த இன்ஸ்பெக்டர் கோவாலு ஒன்னும் அவ்ளோ பெரிய கையெல்லாம் இல்ல… பணம் கொடுத்தால் வால் ஆட்டுவான், அவ்ளோ தான். அவனுக்கு அவ்ளோ சீன்லாம் இல்ல… அதோட டாக்டர் பத்தியும் விசாரிச்சேன். டாக்டர் ரொம்ப நல்ல டைப் டி… நெறய வெளிநாட்டு ஹாஸ்பிடல்ஸ் அவருக்கு லட்ச லட்சமா சம்பளம் கொடுக்கத் தயாரா இருந்தும், நான் படிச்ச படிப்பு என்னோட சொந்த மண்ணுக்கு தான் யூஸ் ஆகணும்னு சொல்லிட்டு, இங்கயே இருந்துட்டாரு மனுஷன். நெறய மெடிக்கல் கேம் போட்டு பல கிராமங்களுக்குப் போய்ச் சர்வீஸ் பண்ணி இருக்காரு… அதனால தான் ராஜீய கூட ஹாஸ்டல்ல தங்கவச்சு படிக்க வச்சிருக்காரு... ம்ம்ம் நல்ல மனுஷன் அவருக்கு இப்படி நடந்திருக்க வேணாம். ஆமா நீங்க அந்தக் கோபாலை கூட்டி போனீங்களே என்ன சொன்னான்?"

"ம்ம்ம் ஒன்னும் பெருசா இல்ல… நாம நினைச்சது தான், அவனுக்கும் சரி, ராஜீய கொல்ல வந்தவங்களுக்கும் சரி இந்தக் கேஸ் பத்தி ஒன்னும் பெருசா தெரியல… காசுக்காகச் செஞ்சிருக்காணுங்க... காசு தந்தது யாருன்னு கூட அவனுங்களுக்குத் தெரியல… இதுக்குப் பின்னாடி இருக்கவன் செம்ம ஸ்மார்ட்! ரொம்பத் தெளிவா மூவ் பண்ணி இருக்கான்!"

"ம்ம்ம் அப்ப அந்த மூணு பக்கிகளும் ஒன்னுக்கும் வொர்த் இல்லன்னு சொல்லு?? அப்ப இந்நேரம் நீங்க உங்க வேலைய காட்டி இருப்பீங்களே… என்ன பண்ணிங்க அதுங்களா?? உயிரோட இருக்கானுங்களா இல்ல..." என்று இழுக்க, நிஷா ராஷ்மியை பார்த்து கண்ணடித்தவள், கட்டை விரலை கழுத்தில் வெட்டுவது போல் காட்டியவள், "கதம் கதம்... உயிரை மட்டும் விட்டுட்டு, மத்தயெல்லாத்தையும் புடிங்கீட்டோம்…" என்றாள்.

"அது சரி ஏற்கனவே யுகி அந்தக் கோபால், ராஜீகிட்ட பேசுன விதத்துல செம்ம காண்டுல இருந்தேன். இப்ப தொக்கா அவனே இவ கையில கிடைச்சா சும்மாவா இருப்பா..." என்ற ஜானு வாசலை பார்த்தவள்,

"ஏய் யுகி ராம் அண்ணா வராங்க" என்க,

"ஹாய்டா அண்ணா..." என்று ஆரம்பித்தவள் சட்டென அவன் யூனிபார்மில் இருப்பதைப் பார்த்து, "குட்ஈவ்னிங் ஏசிபி சார்" என்க,

"நான் இப்ப டியூட்டில இல்ல டா… டியூட்டி முடிஞ்சு வீட்டுக்கு போய்டு இருந்தேன். சரி உன்னோட கேஸ் எப்படிப் போகுதுன்னு பாத்துட்டு போலான்னு வந்தேன்."

"ம்ம்ம் போகுதுண்ணா… இப்ப கூட டாக்டர் வினோத் மர்டர் கேஸ் பத்தி தான் பேசிட்டு இருந்தோம்…"

"என்ன சொல்ற சாம்? மர்டர்ரா? அது சூசைட் தான??"

யுக்தா புருவம் உயர்த்தி ராமை கூர்மையாகப் பார்த்தவள், "ரியலி அண்ணா… அது சூசைட்னு நீ நம்புறீயா??" என்று கேட்டாள்.

"ஆமா ரிப்போர்ட்ஸ் அப்படித் தான சொல்லுது…"

"நான் நீ என்ன சொல்றேன்னு கேட்டேன்?" என்று புருவம் உயர்த்திய யுக்தாவை பார்த்து சிரித்த ராம்,

"ம்ம்ம் சும்மா சொல்லக் கூடாது… நீ சிபிஐக்கு சரியான ஆள் தான். ஜஸ்ட் ஒரு ஐஞ்சு நிமிஷம் தான் அந்தக் கிரைம் சீன்ல இருந்திருப்ப, அதுக்குள்ள அது மர்டர்னு கண்டுபுடிச்சிட்டியே…!" என்றான்.

"ம்ம்ம் பின்ன சும்மாவா நான் யார் தங்கச்சி? யாரோட மருமக? கமிஷனர் பரதனோட டைகருக்கு கண்ணு ரொம்ப ஷார்ப்பாக்கும்!" என்று காலரை தூக்கி விட்டாள்.

"சரி சரி விளையாட்டு போதும்… கேஸ் பத்தி சொல்லு..." என்றவுடன் யுக்தா, சாம்மில் இருந்து சம்யுக்தா ஐபிஎஸ் ஆக மாறிவிட்டாள்.

"இது பிரீபிளான்டு மர்டர் அண்ணா… அதுவும் அந்தக் கொலைகாரன் டாக்டரைப் பத்தி நல்ல தெரிஞ்சவனா தான் இருந்திருக்கணும். அதனால தான் அவருக்கு இடதுகை பழக்கம் இருக்குன்னு தெரிஞ்சு, அவரோட வலதுகையில விஷ ஊசிய போட்டு விட்டிருக்கான்."

"ஏன் யுகி ஊசி வலதுகையில போட்டிருக்குறதை வச்சு மட்டும் இதை மர்டர்னு எப்டி சொல்ல முடியும்? டாக்டர் இடது கை பழக்கம் இருக்கவர் தானே… அப்ப அவரே ஊசிய அவருக்குப் போட்டுக்கிட்டு இருக்கலாம் இல்ல?"

"இல்ல ராஷ்மி அப்படி இருக்க வாய்ப்பே இல்ல… முதல் ரீசன் அவர் தற்கொலை பண்ணிக்க எந்தக் காரணமும் இல்ல. தென் அவருக்கு ரெண்டு கையாலையும் எழுதுற பழக்கம் இருக்கு. பட்…" என்றவள் சில ஃபோட்டோகளை எடுத்து மேஜை மீது வைத்து,


"அவர் எல்லா வேலையும் தான் ரெண்டு கையாலயும் செய்யற பழக்கம் உள்ளவர். ஆனால் அவர் ஆப்ரேஷன் செய்யும் போது மட்டும் அவரோட வலது கையைத் தான் யூஸ் பண்ணுவாரு… நீங்களே இந்த ஃபோட்டோஸை பாருங்க புரியும். ஆப்ரேஷன் மட்டும் இல்ல, சாதாரண ஊசி போடுறதா இருந்தா கூட வலது கையால தான் போடுவாரு… இதை ராஜீயே என் கிட்ட சொல்லி இருக்கா... அப்படிப் பாக்கும் போது ஒரு வேளை அவர் தற்கொலை செஞ்சிருந்தா அவர் ஊசிய தன்னோட இடது கையில தான் போட்டிருப்பாரு… அதோட ஒரு முக்கியமான விஷயம், அவர் யூஸ் பண்ணதா சொல்ற பாய்சன் இட்ஸ் ஏ வெரி பவர்புல் பாய்சன். அந்தப் பாய்சன் எடுத்துக்கிட்டா, உடனே சாகமாட்டாங்க… மொத்த ரத்தமும் உறைஞ்சி, ஒவ்வொரு உடம்பு உறுப்பும் செயலிழந்து, துடிச்சு துடிச்சு சாவாங்க... டாக்டர் சூசைட் செஞ்சுக்க நினைச்சிருந்தா சாகும் போது நிம்மதியா சாகாம ஏன் இப்படித் துடிதுடிச்சி சாகணும்? நீங்க கேக்கலாம், அவருக்கு அந்தப் பாய்சன் பத்தி தெரியாம இருந்திருக்கும், இல்ல அந்த நேரத்துல அந்தப் பாய்சன் தான் அவர் கையில இருந்திருக்கும்னு… அதுக்குச் சான்ஸ்சே இல்ல. பிகாஸ் டாக்டர் வினோத் பாய்சன்ஸ் பத்தி ரிசர்ச் பண்ணிட்டு இருந்தாரு.. அவருக்கு அது ஒரு பேஃஷன்னு கூடச் சொல்லாம்.. சோ இது சூசைட் இல்ல…" என்று யுக்தா உறுதியாகச் கூறினாள்.


"நீ சொல்றது எல்லாம் கரெக்ட் தான் சாம்.. இதெல்லாம் எனக்கும் தெரியும்.. அப்ப அவரை ஏன் கொன்னாங்க.?? யார் கொன்னாங்க.?? என்ன மோட்டிவ்.?? அதோட நீ இங்க வந்தது வேற கேஸ்க்காகத் தான?? ஏன் இந்தக் கேஸ்ச நீ டேக் ஓவர் பண்ண?" என்ற ராமை தீர்க்கமாகப் பார்த்தவள்,

"பிகாஸ் எந்த ஷோஷியல் ஆக்டிவிஸ்ட், அடிக்கடி ரோட்டோரம் அடையாளம் தெரியாத மக்கள் காணாம போறாங்கன்னும், அது பத்தி விசாரிக்கணும்னு கோர்ட்ல கேஸ் போட்டு இந்தக் கேஸ் சிபிஐ கைக்கு வந்ததோ அந்த ஆக்டிவிஸ்ட் வேற யாரும் இல்ல, டாக்டர். வினோத்தோட பெஸ்ட் ப்ரண்ட் தான். ஆறு மாசத்துக்கு முந்தி நாங்க சென்னை வந்ததும் இந்தக் கேஸ்க்காகத் தான். டாக்டர் வினோத்துக்கு இந்தக் கேஸ் பத்தி ஏதோ விஷயம் தெரிஞ்சிருக்கு... சோ இந்தக் கேஸ் இன்வஸ்டிகேஷன்ல எங்களுக்கு உதவியா இருக்கிறதா சொன்னாரு... அப்படிச் சொன்ன அடுத்தப் பத்து நாள்ல அவர் இறந்துட்டாரு... சோ இது வேற வேற கேஸ் இல்ல… ஒரே கேஸ் தான்." என்று உறுதியாகச் சொன்னாள்.


கேஸ் இன்வஸ்டிகேஷன் ஒரு பக்கம் போக, இதோ யுக்தா உதய் கல்யாண நாளும் நெருங்கி வந்து விட்டது.