Posts

Showing posts from May, 2024

இதயம் 13

  இதயம் 13 ஆதர்ஷன் அழைத்ததால் அவனைப் பின் தொடந்து சென்றாள் தர்ஷினி. ஒரு அறையின் முன்னால் நின்ற ஆதர்ஷன், தர்ஷினியைத் திரும்பிப் பார்த்தவன், “இந்த ரூம் தான் வினி, உள்ள வா” என்று அவன் முன்னே செல்ல சிரித்த முகத்துடன் உள்ளே சென்றவள் அறியவில்லை, இன்னும் சற்று நேரத்தில் அவள் சிரிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துப் போகப் போகிறதென்று. அந்த அறை பார்க்க மிகவும் நேர்த்தியாக அழகாக இருக்க, “ரூம் இன்டீரியர் ரொம்ப அழகாய் இருக்கில்ல வினி?” என்று கேட்டவனுக்கு எப்படித் தெரியும், அவள் கவனம் முழுவதும் அவன் ஒருவன் மீது மட்டும் தான் இவ்வளவு நேரமாக இருக்கிறதென்று.  அவன் கேள்வியில் சட்டென இமைகளைச் சிமிட்டியவள், “என்ன? என்ன கேட்டீங்க தர்ஷன்?” என்று கேட்க, அவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்தவன், “ரூம் இன்டீரியர் ரொம்ப நல்லா இருக்கில்லன்னு கேட்டான்” என்றான்‌. தர்ஷினி ஒருமுறை அந்த அறையைச் சுற்றிப் பார்த்தவள், “ம்ம்ம் அழகா இருக்கு” என்றாள் பட்டுப் போன்ற மென் குரலில். அவள் நின்று கொண்டிருப்பதைக் கவனித்த ஆதர்ஷ், “உக்காரு வினி…” என்றவன் “என்ன குடிக்கிற?” என்று கேட்டவன் அவளுக்கு கோல்ட் காஃபி பிடிக்கும் என்பதால், “கோல்

இதயம் 12

  இதயம் 12 அன்றைய பார்ட்டி முடிந்து அனைவரும் கிளம்பிச் செல்ல, ஆதர்ஷன், அதீஷனின்‌ கையைப் பிடித்துத் தன்பக்கம் இழுத்தவன், “டேய் அதீ… வினி கிளம்புறா பாரு… அவளை நம்ம கூட வரச்சொல்லு. வீட்டுல டிராப் பண்ணிட்டுப் போலாம். நைட்ல தனியா எல்லாம் போக வேணாம்.” என்றவனைப் புருவம் உயர்த்தி முறைத்தான் அதீஷன். “டேய், உனக்கு வேணும்னா நீயே போய் கூப்பிடு… சும்மா என்னைத் தூது போகச் சொல்லாத…” என்று கடுப்பாகச் சொல்ல, ஆதர்ஷ் பதிலுக்கு அவனை முறைத்தவன், “டேய்…” என்று பல்லைக் கடிக்க, “அய்யோ தஷ்… ப்ளீஸ் வந்த இடத்தில் உங்க சண்டையை ஆரம்பிக்காதீங்க…” என்று அவன் தோளைப் பிடித்து இழுத்த தன்வி, “இவருக்காக இல்ல… இந்த டைம்ல தர்ஷினி அக்கா தனியாப் போறது நல்லது இல்ல… அதனால நானே போய் கூப்பிடுறேன்.” என்று ஆதர்ஷனைப் பார்க்காமல் பேசிவிட்டு தர்ஷினியிடம் சென்றாள். “அக்கா வாங்க… நாங்க உங்களை ட்ராப் பண்றோம்” என்று சொல்ல தர்ஷினி இடவலமாகத் தலையாட்டியவள், “இட்ஸ் ஓகே தன்வி… நான் கேப் புக் பண்ணிப் போயிடுவேன்.” என்றாள் தர்ஷினி. “அதெல்லாம் முடியாதுக்கா, லேட் நைட் ஆகிடுச்சாம். நீங்க தனியாப் போக வேண்டாமாம். அவளைக் கூப்பிடு, நம்ம ட்ராப் பண்ணிட்ட

இதயம் 11

  இதயம் 11 அதிகாலை தூக்கம் கலைந்து எழுந்த ஆதர்ஷனின் பார்வை அங்கு மேசை மேல் இருந்த டிஜிட்டல் நாள்காட்டியில் பதிந்தது‌. இன்றோடு ஒரு வாரம் ஆகிவிட்டது அவன் தர்ஷினியைப் பார்த்து. அன்று இனி உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சொல்லி விட்டுச் சென்றவள், அதன் பிறகு அவன் கண் முன்னால் கூட வரவே இல்லை‌. ஆனால் அவள் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் ஒழுங்காக, இன்னும் சொல்லப் போனால் வேக வேகமாகச் செய்து கொண்டிருந்தாள்.  அதற்கான காரணம் ஆதர்ஷனுக்கும் புரிந்தது. சீக்கிரம் ப்ராஜெக்ட் முடித்து விட்டு அவன் கண் பார்வையில் படாமல் வேறு நாட்டிற்குச் செல்ல அவள் ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறாள் என்று கேள்விப்பட்ட நாளில் இருந்து அவன் அவனாக இல்லை. இந்தப் ப்ராஜெக்ட் முடிந்த பிறகு அவள் முகத்தைப் பார்க்க முடியாது என்ற எண்ணம் அவனை வெகுவாக பாதித்தது. அதற்காக அவள் காதலை ஏற்கவும் அவனால் முடியவில்லை. விருப்புக்கும், வெறுப்புக்கும் இடையில் மாட்டித் தவித்துக் கொண்டிருந்தான் ஆதர்ஷன். அவன் இப்படி என்றால் தர்ஷினியோ உயிர் தொலைத்த உடலாக மாறிப் போனாள்‌.  அன்று தர்ஷினியைப் பார்க்க, தன்வியோடு அவள் வீட்டுக்கு வந்திருந்தான் அதீஷன்.