ஆழியின் ஆதவன் 24
ஆழி 24 ஒரு மரத்தின் அருகில் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி சைத்ரா விசும்பிக் கொண்டிருக்க, "இங்க நின்னுட்டு என்னடி பண்ற?" என்ற முகிலின் குரல் பின்னால் கேட்க, கோவமாக திரும்பியவள், "நான் என்னமோ பண்றேன், உனக்கென்ன வந்தது அதை ஏன் நீ கேக்குற?" "நீ என் வருங்காலப் பொண்டாட்டி, உன்னை நான் கேக்காம வேற எவன்டி கேட்பான்." "அதான் என்னை கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டீயே… அப்புறம் என்னவாம்" என்று அவள் திருப்பி நின்று கொள்ள, அவள் குழந்தைத்தனத்தை உள்ளுக்குள் வெகுவாக ரசித்த முகில், "சரி.. நான் தான் அப்ப கட்டிக்க மாட்டேன்னு சொன்னேன். இப்ப நானே சொல்றேன் உன்னை தான் கட்டிக்குவேன்" என்றவன் திரும்பி பார்த்த சைத்ராவை முகிலை இழுத்து அணைத்துக் கொண்டான். சைத்ரா அவன் தோளில் முகம் புதைக்க, அவளின் ஆனந்தக் கண்ணீர் அவன் சட்டையை நனைத்தது. "என்னை கட்டிப்பீங்களா?" என்று அவள் கேட்க, "ஓய் வாயாடி இப்ப உன்னை கட்டிட்டு தானடி இருக்கேன்.?" என்று அவள் காதை உரசியபடி அவன் சொல்ல, லேசாக உடலை நெளித்த சைத்ரா, "நான் இந்த கட்டிக்கிறதை சொல்லல" என்று சினுங