ஆழியின் ஆதவன் 23

 


ஆழி 23


மீரா சொன்னதை கேட்டு ஆழி கண்கலங்க அமர்ந்திருந்தாள்.


"ஏன் ஆழி கொஞ்ச நாள் பழகுன சைத்துவையே இவ்ளோ புரிஞ்சு வச்சிருக்க ஆதவ்க்கு, இவ்ளோ நாளா கூடவே இருக்க உன் மனசு‌ புரியாம‌ இருக்கும்னு நீ நினைக்குறீயா, ஐ மீன் உன் மனசுல அவர் தான் இருக்காருன்னு‌ அவருக்கு தெரியாமயா இருக்கும்?"


"மீரா ப்ளீஸ் இத பத்தி நம்ம ஏற்கனவே பேசிட்டோம். என் மனசுல அவர் இல்ல, அவர் மட்டும் இல்ல அங்க யாரும் இல்ல… இன் ஃபேக்ட் எனக்கு மனசுன்னு ஒன்னு இல்லவே இல்ல. அது எப்பவோ செத்துப் போச்சு."


"ம்ம்ம் அப்படியா ஆழி… உன்‌ மனசு செத்துப் போச்சு சரி… ஆனா, செத்த அந்த மனசுக்கு நிலாவையும் ஆதவ் சாரையும் பாக்கும்போது மட்டும் உயிர் வந்து வந்து போகுது போலயே…"


"ப்ளீஸ் மீரா… இந்த டாப்பிக் வேணாம். நான் என் முடிவை ஏற்கனவே சொல்லிட்டேன். இனிமே அதைப் பத்தி பேச ஒன்னும்‌ இல்ல"


"அஃப்கோர்ஸ் அழி‌… நீ உன் முடிவை ஏற்கனவே சொல்லிட்ட தான். பட், அது ஆதவ்வும் நிலாவும் உன் வாழ்க்கையில வர்றதுக்கு முன்னாடி…"


"சோ வாட்… அவங்க வந்ததுனால மட்டும் என் முடிவு‌ மாறிடாது"


"அது எனக்கும் தெரியும் ஆழி. ஆனா, நான் இப்ப கேக்குறது நீ எடுத்த முடிவ பத்தியே, உன்னோட பதிலயோ இல்ல,‌ நான் தெரிஞ்சிக்க நினைக்குறது உண்மையை…" என்று ஆழியை கூர்மையாகப் பார்த்தவள்,


"அது நீ நிலா பாப்பாக்கு அம்மாவா இருக்க ஆசைப்படும் உண்மை, வெண்மதி அம்மாக்கு மருமகளா இருக்க நினைக்கும் உண்மை… மிஸ்டர். ஆதவனுக்கு மனைவியா, மிஸஸ். ஆழினி ஆதவன்னு, அவர் பொண்டாட்டியா காலம் முழுக்க அவர் கூட இருக்க ஆசைப்படும் உண்மையை" என்று அழுத்தமாகச் சொல்ல,


மீராவின் வார்த்தையில் இருந்த உண்மை ஆழியின் உள்ளதைச் சுட, கண்களை இறுக்கி மூடிக் கொள்ள,‌ மீரா ஆழியை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.


"எங்களை தவிர உன்கிட்ட இதைப் பத்தி பேச யாருக்கும் உரிமை இல்ல ஆழி. நங்க ரெண்டு பேர் மட்டும் தான் இதெல்லாம் உன்கிட்ட கேக்க முடியும். அதான் கேட்டேன். ஆதவ் பத்தி யோசிச்சு பாரு ஆழி…"


"இல்ல மீரா இது நடக்காது. விட்டுடு, எனக்கு உங்க ரெண்டு பேர் தவிர வேற யாரும் தேவையில்ல"


"பொய் சொல்லாத ஆழி. நான் நேத்து பாத்தேன், நீ ஆதவ் தோள்ல சாஞ்சு அழுததை. உனக்கு கஷ்டம்னு வரும்போது உன் மனசு உன்னையும் அறியாம அவரை தான் தேடுது, முதல்ல அதை நீ புரிஞ்சுக்க, அவர்கிட்ட நீ நீயா இருக்க, அது உனக்கு புரியுதா இல்லயா?" என்று சற்று அதட்டலாக கேட்க,


மீராவை விட்டு விலகிய ஆழி, அவள் முகத்தைப் பார்த்து, 


"எனக்கு புரியுது மீரா, நல்லா புரியுது. நான் நிலாவை தூக்கின நொடி தாய்மையை உணர்ந்தேன்னு சொன்னேனே… அதே மாதிரி அன்னைக்கு டிரக்ஸ் எடுத்து எதுவும் முடியாம படுத்துக் கிடக்கும் போது, ஆதவ் தான் என்னை கவனிச்சிக்கிட்டாரு. அவர் என் பக்கத்துல இருந்த ஒவ்வொரு நிமிஷமும், அவர் என்ன தொட்ட ஒவ்வொரு நொடியும் முதல் முதல்லா நான் ஒரு பொண்ணுன்னு ஃபீல் பண்ணேன், என்னோட பெண்மையை ஃபில் பணணேன்டி… அவர் தொடும் போது என்னையும் அறியாம எனக்கு உடம்பு கூசிச்சு… எனக்கு கூட வெக்கம் வரும்னு எனக்கே அன்னைக்கு தான் தெரிஞ்சது" என்றவள் கண்களில் ஆனந்தத்திற்கு பதில் அழுகை தான் வந்தது.


"ஏய் ஆழி… இப்ப எதுக்கு அழற? இது நல்ல விஷயம் தானடி இதுக்கு ஏன் அழற நீ?" என்று மீரா பதற,


"அதுக்கு எனக்கு தகுதி இல்லயேன்னு நெனச்சு அழறேன்டி… அவருக்குப் பொண்டாட்டியா இருக்க தகுதி இந்த கொலைகாரிக்கு இல்லன்னு நெனச்சு அழுகுறேன்." என்று கதறியவள் மீரா மடியில் முகம் புதைக்க, மீரா மெதுவாக அவள் தலையை வருடி விட்டவள், ஆழியின் மனதை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி இதற்கு ஒரு முடிவெடுக்க முடிவு செய்தாள்.


ஆழி அங்கிருந்து சென்றவுடன், சைத்ரா ஆழி முகம் வாடி இருந்ததைப் பார்த்து, மீராவிடன் என்ன நடந்ததென்று கேட்க, மீரா சொன்ன செய்தியில் சைத்ரா முகத்தில் புன்னகை.


"வாவ் அப்ப நம்ம நெனச்சது சரிதான். ஆதவ் சார் நம்ம ஆழிய விரும்புறாரு. ஜாலி தான்" என்று கத்த,


"அவர் இவளை விரும்புறாரு தான். ஆனா, இவ பிடிவாதமா அதெல்லாம் முடியாதுனு கத்திட்டு போறாளே," என்ற மீரா முகத்தை யோசனையாக பார்த்த சைத்ரா,


"மீரா நீ ஆதவ்‌க்கு ஃபோன் பண்ணி அழி சொன்னதை எல்லாம் சொல்லிடு, மீதிய அவர் பாத்துப்பாரு, இதுல நம்மால ஒன்னும் செய்ய முடியாது. அவரும் நிலா பாப்பாவும் தான் ஆழிய அடக்க ஒரே வழி. நீ ஃபோன் போடு" என்றதும் மீரா, ஆதவ்வை அழைத்து அனைத்தையும் அவனிடம் சொல்லிவிட, அதைக் கேட்ட ஆதவ்,


"தேங்க்ஸ் மீரா… இனிமே அவளைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க, நான் பாத்துக்குறேன். என்னை விட்டு ‌எங்க போய்ட போறா அவ… எங்க சுத்துனாலும் அவ என்கிட்டயும் நிலாகிட்டயும் தான் திரும்பி வந்தாகணும்." என்று ஆதவன் சிரிக்க, அப்போது தான் மீராவுக்கு நிம்மதி வந்தது.


யுவராஜ் வர இன்னும் பத்து நாள் ஆகும் என்பதால் அவனை என்ன செய்யலாம் என்று பெண்கள் டிசைன் டிசைனாக யோசிக்க, ஆண்கள் மூவரும் அவர்கள் ஆளை கவுக்க விதவிதமாக யோசித்தனர்.


வீட்டில் இருந்து போர் அடிக்குது என்று ஆழியும், மீராவும் சைத்ராவை ஒரு ரெஸ்டாரண்ட் அழைத்துச் செல்ல, அங்கு முகிலும் விஷ்ணுவும் ஆதவனுடன் உட்கார்ந்து இருந்தனர்.


ஆழியும் மீராவும், சைத்து முகிலை கோர்த்துவிட ப்ளான் போட, முகிலும் விஷ்ணுவும் ஆழி, ஆதவ்வை சேர்த்து வைக்க ப்ளான் போட்டு, ஆதவ்வையும் அங்கு வர வைத்திருந்தனர். ஒரே வீட்டில் இருந்துக்கொண்டு ஆதவனை பார்ப்பதை தவிர்த்து வந்த ஆழி இங்கு அவனை தவிர்க்க முடியாது போக, அமைதியாக அமர்ந்து கொண்டாள்.


ஆர்டர் செய்த உணவு வந்துவிட, அனைவரும் அமைதியாக உண்ண, முகில் சைத்ராவை ஓரக்கண்ணால் பார்த்தவன், விஷ்ணுவுக்கு சிக்னல் தர,


"அப்புறம் மீரா, இந்த யுவராஜ்க்கு என்ன ப்ளான் பண்ணி இருக்கீங்க?" என்று பேச்சை தொடங்கினான் விஷ்ணு.


"அந்த ராஸ்கல் இப்ப ஊர்ல இல்ல விஷ்ணு… ஃபாரின் போயிருக்கு, வர பத்து நாள் ஆகும்."


"ம்ம்ம் அப்ப பத்து நாள் கழிச்சு அவனுக்கு பாலூத்திடலாம், அப்படி தான"


"ம்ம்ம் ஆமா விஷ்ணு, அதோட எல்லாம் ஒரேயடியா முடிஞ்சிடும்,‌ எல்லாமே முடிச்சிடும்" என்று அந்த முடிஞ்சிடுமை அழுத்தி சொன்ன ஆழியை ஆதவ் முறைக்க, அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.


"ஆமா நீ சொல்றது சரிதான் ஆழி,‌ இதெல்லாம் முடிஞ்சதும், அடுத்து ஒவ்வொருத்தரா கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட வேண்டியது தான். நாங்களும் எவ்ளோ நாள் தான் சிங்கிளா சுத்துறது." என்று விஷ்ணு தூண்டில் போட,


"ஆமா விஷ்ணு, நீ சொல்றது தான் கரெக்ட். அம்மா வேற சீக்கிரம் கல்யாணம் பண்ணு பண்ணுன்னு நச்சரிச்சிட்டே இருக்காங்க, ஊர்ல இருந்து அத்தை வேற ஃபோன் பண்ணி இந்த விஷ்ணுவுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்க கூடாதான்னு ஒரே புலம்பல். சோ, சீக்கிரம் கல்யாணத்தை முடிக்கணும். நம்ம ரெண்டு பேருக்கு பிரச்சனை இல்ல… எனக்கும் உனக்கும் ஆல்ரெடி ஆள் இருக்கு, இந்த முகிலுக்கு தான் ஒரு நல்ல பொண்ணா பாக்கணும்" என்ற ஆதவனை ஆழி முறைக்க, சைத்ரா மெதுவாக இமைகளை உயர்த்தி முகிலை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் தன் உணவை உண்ண ஆரம்பித்தவள் கவனம் மட்டும் முகில் என்ன சொல்லப் போகிறேன்  என்பதிலேயே இருந்தது.


"டேய் எனக்கு பொண்ணு பாக்குற வேலை எல்லாம் வேணாம். நானெல்லாம் ஒரு லட்சியத்தோட வாழ்ந்துட்டு இருக்கவன்… உங்க இஷ்டத்துக்கு பொண்ண பாத்தா, நானெல்லாம் அவளை கட்டிக்க மாட்டேன் ஆமா சொல்லிட்டேன்."


"ஏய் என்னடா புதுசா லட்சியம் அது இதுன்னு சொல்ற… இதுவரை நீ அப்படி எதுவும் சொன்னதில்லயே" என்று உளறிய விஷ்ணு காலை சட்டென மிதித்த முகில்‌,


"மவனே இப்ப நீ வாய மூடல… சில்லி சாஸ் எடுத்து மூஞ்சில ஊத்திடுவேன். மூடிட்டு கம்முனு இருடா" என்று காதை கடிக்க, விஷ்ணு கப்பென வாயை இழுத்து மூடிக்கொண்டான்.


"இங்க பாரு ஆதவ் எனக்கு புடிச்ச மாதிரி பொண்ணு கிடைச்சா தான் நான் கல்யாணம் பண்ணுவேன். அட்லீஸ்ட் எனக்கு வர்ற பொண்டாட்டி நம்ம மீரா மாதிரி அமைதியான பொண்ணா இருக்கணும். முடிஞ்சா அப்டி ஒரு பொண்ண பாரு" என்றதும் சைத்ரா ஓரக்கண்ணால் மீராவை முறைக்க, ஆதவ் அவன் தலையில் தட்டினான்.


"ஆமா இவரு பெரிய இவுரு இவர் இஷ்டத்துக்கு நாங்க பொண்ணு பாக்கணுமாம், போடா டேய். உனக்கெல்லாம் அமைதியான பொண்ணு செட்டாகாது… நல்ல வாயாடி பொண்ணா தான் பாப்போம். உனக்கு அப்படி இருக்க பொண்ணு தான் செட்டாகும். சிம்பிளா சொல்லனும்னா, ம்ம்ம்" என்று யோசித்தவன், "ஹான்… நம்ம சைத்து மாதிரி நல்ல கலகலப்பான பொண்ணு தான் உனக்கு பாப்பேன்" என்று ஆதவன் அவன் பங்கிற்கு சைத்ராவுக்கு தூண்டில் போட்டான்.


"அதென்ன ஆதவ் சைத்து மாதிரி… பேசாம நம்ம சைத்துவையே இவனுக்கு கட்டி வச்சிட்டா என்ன? என்ன சைத்து, நீ என்ன சொல்ற? தயவுசெய்து இந்த கொரங்குக்கு வாழ்க்கை குடும்மா" என்ற விஷ்ணுவை சைத்ரா அதிர்ந்துப் பார்த்தவள், பதில் சொல்ல வாய்திறக்கும் முன்,


"டேய் டேய் யார்கிட்ட என்ன கேட்டுட்டு இருக்க நீ… நான் யாரு அவ யாரு… எனக்கு அவ ஜோடியா… லூசுப்பயலே" என்றதும் சைத்ரா முகம் சட்டென வாடிவிட்டது. 


"ஏன் முகில் அவளுக்கு என்ன குறைச்சல்? ஏன் அப்டி சொல்றீங்க?" என்று ஆழி கோபமாக கத்த,


"அய்யோ ஆழி… அவளுக்கு ஒரு குறையும் இல்ல, எல்லாத்துலயும் அவ என்னைவிட மேல இருக்கா,‌ அப்புறம் எப்டி நான் அவளை கட்டிக்க முடியும், அதான் அப்டி சொன்னேன். அவ பெரிய இன்ஜினியர், டாப் போட்டோகிராஃபர், பாக்க சும்மா பொம்மை மாதிரி அழகா, அம்சமா இருக்கா. ஆனா, என்னை பாரு, நான் வெறும் ஐபிஎஸ், சொந்தம்னு சொல்லிக்க ஆதவ், விஷ்ணுவை தவிர எனக்குன்னு யாரும் இல்ல. அப்டிபட்ட என்னை போய் கட்டிக்க இவ சம்மதிப்பாளா சொல்லு… அவ ரேஞ்சுக்கு அவ அமெரிக்கா மாப்பிள்ளைய தான் கட்டிக்குவா… என்னை எல்லாம் எங்க கட்டிக்கப்போற?!" என்று முகத்தை பாவமாக வைத்துக் கொள்ள, சைத்து சட்டென எழுந்து நின்றாள்.


"ஹலோ நான் எப்ப சொன்னேன் அமெரிக்கா மாப்பிள்ளைய தான் கட்டிப்பேன்னு. நான் ஒன்னும் ஃபாரின் பையனை எல்லாம் கட்டிக்க மாட்டேன்" என்று தூண்டிலில் சரியாகச் சிக்க, முகிலுக்கு உள்ளுக்குள் பேரானந்தம்.


"ஒஒஒ அப்ப நீ ஃபாரின் மாப்ள எல்லாம் கட்டிக்க மாட்டியா?" என்று மீண்டும் கேட்க, அவள்‌ ஆமாம் என்று வேகமாக தலையாட்டினாள்.


"சரி ஃபாரின் மாப்ளய கட்டிக்க மாட்ட..‌. ஆனா, அதுக்காக என்னை மாதிரி ஒருத்தனை கட்டிக்கவும் ஒத்துக்க மாட்ட இல்ல" என்று பாவமாக செல்ல,


"ஏன் ஏன்… ஏன் ஒத்துக்க மாட்டேன். உங்ளுக்கு என்ன குறைச்சல்?" என்று எதிர் கேள்வி கேட்டவள், அவளையும் அறியாமல் அவன் வலையில் சிக்கிக்கொண்டாள்.


"என்ன கொறச்சல? உன் அளவுக்கு அழகு இல்ல, படிப்பும் சுமார் தான், சொத்து அது இதுன்னு பெருசா ஒன்னும் இல்ல, சம்பளம் கூட உன்னைவிட கம்மிதான் என்ன மாதிரி ஆள எல்லாம் நீ கல்யாணம் கட்டிப்பியா என்ன?" என்று முகத்தை பாவமாக வைத்துக்கொள்ள, சைத்ரா முகில் அருகில் வந்தவள், 


"நீங்க சொன்னதெல்லாம் பெரிய மேட்டரே இல்ல… உங்கள மாதிரி என்ன... நான் உங்கள தான் கட்டிக்குவேன்" என்று தன்னை மறந்து அவள் சொல்லிவிட, அனைவர் முகத்திலும் வெற்றி புன்னகை.


"ம்ம்ம்… அது சரி நீ ஒத்துக்கிட்டா போதுமா?" என்ற முகிலை முறைத்த சைத்ரா,


"வேற யார் ஒத்துக்கணும்?"


"ஏய் அதுக்கு நானும் சம்மதிக்கணும்டி?"


"அதெல்லாம் சம்மதிக்காம எங்க போய்டுவீங்கன்னு நானும் பாக்குறேன். என்னை விட்டு நீ வேற எவளையும் கல்யாணம் பண்ண‌ முடியாது. நான் விடவும் மாட்டேன்" என்று  மூக்கை உறிஞ்சியபடியே அங்கிருந்து ஓடிவிட,


"டேய் அவ நீ நிஜமா சொல்றேன்னு நெனச்சிட்டு கோச்சிட்டு போற போல… போடா போய் அவ கிட்ட உண்மைய சொல்லு…" என்று விஷ்ணு விரட்ட, முகில் சைத்ரா பின்னால் ஓட, தலைதெறிக்க ஓடும் அவனை பார்த்து அனைவரும் சிரித்தனர்.