இடுகைகள்

ஜூலை, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன் விழியில் கைதானேன் 11

  விழி 11 அந்த மருத்துவமனையில் தேவாவுக்குச் சிகிச்சை நடந்து கொண்டிருக்க, அந்த அறுவை சிகிச்சை அறையின் முன் தன் கையில் ஒட்டியிருந்த தேவாவின் உதிரத்தை வெறித்துப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் சந்தியா. அறுவை சிகிச்சை முடிந்து தேவா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு இருந்தான். சந்தியாவின் மொத்தக் குடும்பமும் அங்கு தான் இருந்தது.  ஆர்த்தி ஒரு பக்கம் அழுது கொண்டு இருக்க, அவள் கணவன் அருள் அவளைச் சமாதானம் செய்து கொண்டு இருந்தான். மருத்துவர்கள் அந்த அறையை விட்டு வெளியே வர, மொத்தக் குடும்பமும் அவரைச் சூழ்ந்து கொண்டது. “தேவாக்கு இப்ப எப்படி இருக்கு டாக்டர்?” என்று ஆர்த்தி கண்ணீரோடு கேட்க, சந்தியா ஒருவிதத் தவிப்போடு டாக்டர் முகத்தையே பார்த்திருந்தாள். “ஆப்பரேஷன் முடிஞ்சது‌. புல்லட்டை ரிமூவ் பண்ணியாச்சு. பட்…” என்று அவர் இழுக்கச் சந்தியாவுக்கு நெஞ்செல்லாம் அடைத்தது. “என்ன டாக்டர், என் தம்பிக்கு என்ன?” என்று ஆர்த்தி பதற சூர்யா முன்னால் வந்தவன், “என்ன டாக்டர், என்ன ப்ராப்ளம்? எதுவா இருந்தாலும் சொல்லுங்க. இன்னும் டாக்டர்ஸ் வேணுமா? இல்ல இதைவிடப் பெரிய ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போகணுமா? இல்ல ஃபா

உன் விழியில் கைதானேன் 10

  விழி 10 தன் முன்னால் மயக்க நிலையில் படுத்திருந்த சந்தியாவைப் பார்த்து வன்மமாகச் சிரித்த அவளின் முதலாளி கருணா, அவன் அருகில் இருந்த அடியாள்களைப் பார்த்து, “எப்படா, இவளுக்கு மயக்கம் தெளியும்?” என்று கேட்டான். “இன்னும் பத்து நிமிஷத்தில் மயக்கம் தெளிஞ்சிடும் பாஸ்.” என்றான் ஒருவன்.  “ம்ம்ம்… மயக்கம் தெளிஞ்சதும் இவளுக்கு இருக்கு… என் கிட்டயே வேலை பார்த்துட்டு, என்னோட கம்பெனிக்கு எதிராவாடி வேலை பார்த்துட்டு இருக்க? நீ பண்றது எனக்குத் தெரியாதுன்னு நினைச்சிட்ட இல்ல... இப்போ பார்த்தியாடி, உன்னையே தூக்கிட்டேன்.” என்று சத்தமாகச் சிரித்தவன், “இவ கண்ணு முழிச்சதும் சொல்லுடா… எனக்கு எதிரா எதுவும் செஞ்சா அதோட விளைவு எப்படி இருக்கும்னு இவளுக்குப் புரியணும்.” என்றான் அவளின் உடல் மேல் வக்கிரமாகப் பார்வையைப் பதித்தபடி. “இவளை என்ன செய்யப் போறீங்க? கொன்னுடப் போறீங்களா பாஸ்?” என்று கேட்டான் ஒருவன். “இதென்னடா அறிவு கெட்ட கேள்வி? பார்க்க நல்லாப் பளபளன்னு கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கறவளைக் கடத்திட்டு வந்துட்டு அனுபவிக்காம எந்த முட்டாளாவது கொல்லுவானாடா?” என்றவனின் வார்த்தையை மட்டும் சந்தியா கேட்டிருந்தால், பே

உன் விழியில் கைதானேன் 9

 விழி 9 அன்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சந்தியாவின் முகம், கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் சம்பவத்தை நினைத்துக் குழம்பி இருந்தது. அவளின் முகத்தைப் பார்த்தே அவள் மனமறிந்த சூர்யா, “என்னாச்சு சந்தியா? எதுவும் பிரச்சனையா? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” என்று கேட்டான் அக்கறையாக. அதற்கு அவன் அருகில் இருந்த நிலாவோ, “இதென்ன கேள்வி? இவளுக்கு இருக்க ஒரே ப்ராப்ளம் தேவா தான். வேற என்ன புதுசா வந்திடப் போகுது.” என்றவளைப் பார்வையால் அடக்கிய சூர்யா, “நீ சொல்லுமா, எதுவும் ப்ராப்ளமா?” என்று மீண்டும் கேட்டான் சூர்யா. முதலில் சூர்யாவிடம் நடந்ததைச் சொல்ல நினைத்த சந்தியா, பின் ஏற்கனவே தன்னை நினைத்து வருத்தத்தில் இருக்கும் தன் அக்கா, மாமாவுக்கு இதையும் சொல்லி பயமுறுத்த வேண்டாம் என்று நினைத்தவள், “அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல மாம்ஸ்… கொஞ்சம் வேலை டென்ஷன், அவ்ளோதான்!” என்றாள் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு. அவளை ஒரு கணம் கூர்மையாகப் பார்த்த சூர்யா, “உனக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் என்கிட்ட இல்ல, அர்விந்த்கிட்டச் சொல்லிடு சந்தியா… எதையும் மறைச்சு வைக்காத.” என்று அழுத்தமாகச் சொன்னவனை இமைகள் உயர்த்திப் பா

உன் விழியில் கைதானேன் 8

  விழி 8 அன்றும் வழக்கம் போல் சந்தியாவைப் பின்தொடர்ந்து வந்தான் தேவா. அவள் காரில் இருந்து இறங்கி, திரும்பி இவனைப் பார்த்து முறைத்து விட்டுச் செல்ல, அவளின் கோபத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் தேவா. ’முறைச்சிட்டா போற… போடி போ… இன்னைக்கு இருக்கு உனக்கு’ என்றவன் உதட்டில் குறும்புப் புன்னகை மலர்ந்தது. சந்தியா அவள் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க, அவளிடம் வந்த வைஷ்ணவி, “சந்தியா, இன்னைக்கு ஏதோ முக்கியமான மீட்டிங் இருக்காம். கான்ஃபரன்ஸ் ரூம்ல இருக்கற சிஸ்டம் எல்லாத்தையும் செக் பண்ணி பக்காவா வைக்கணும்னு பாஸ் சொன்னாரு.” என்று சொல்ல, சலிப்பாக அவளைப் பார்த்த சந்தியா,  “அந்தத் தேங்கா நார் மண்டையனுக்கு வேற வேல இல்லியாடி… எப்பப்பாரு வேலை ஏவிட்டே இருக்கான். போன வாரம் தானே அங்க இருந்த சிஸ்டம் எல்லாம் ரெடி பண்ணி வச்சேன். அதுக்குள்ள என்னவாம்? அந்தாளுக்குக் கொஞ்சம் கூட நாலேஜ் இல்ல… ஆனா, அந்தாளைப் போய் இப்ப்டி பொறுப்பான பதவியில் வச்சிருக்காரு நம்ம எம்.டி” என்றவளைப் பார்த்துச் சிரித்த வைஷ்ணவி, “ஏய் மெதுவாப் பேசுடி… அந்த ஆள் காதுல விழுந்தது, நீ அவ்ளோதான்.” என்று அவளை எச்சரிக்க,  “ப்ச்ச்… கேட்டா கேக்க

உன் விழியில் கைதானேன் 7

  விழி 7 சந்தியா பகல் முழுவதும் தன் அறையிலேயே கழித்தவள், மாலை நேரம் போல் வெளியே சென்றிருந்தாள். “நிலா… இந்தப் பிடாரி எங்க போனா? சொல்லிட்டுக் கிளம்பலாம்னு பார்த்தா ஆளையே‌ காணும். நம்ம ஆர்த்தியைப் பார்க்கப் போறோம்னு அவளுக்குத் தெரியுமா இல்லயா?” என்று கேட்ட தேவியிடம், ஆர்த்திக்காக எடுத்து‌ வைத்திருக்கும் பலகாரங்களைக் கொடுத்த நிலா, “அதெல்லாம் காலைலயே சொல்லிட்டேன் தேவி… காலைல இருந்து தலைவலின்னு சொல்லி ரூமை விட்டு வெளியவே வரல. இப்பப் பார்த்தா ஆளைக் காணும்.” என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே சந்தியா இரண்டு கைகள் நிறையப்‌ பைகளுடன் வீட்டுக்குள் நுழைந்தாள். அவளைப் பார்த்த தேன்மொழி, “இதோ வந்துட்டா நிலா” என்றவள் சந்தியாவிடம், ”எங்கடி போன நீ? உனக்குத்தான் உடம்பு சரியில்ல இல்ல..‌. அப்புறம் எதுக்குடி இப்ப வெளிய போன?” என்ற தேனுவின் அருகில் வந்து அமர்ந்த சந்தியா, “காலையில் இருந்து படுத்துட்டே இருந்தது ரொம்ப போர் அடிச்சிது அக்கா. அதான் சும்மா ஈவினிங் சாப்பிடக் கொஞ்சம் ஸ்நாக்ஸ் வாங்கலாம்னு வெளிய போனேன்.” என்றவளை விசித்திரமாகப் பார்த்தனர் தமக்கைகள் மூன்று பேரும். அவர்களைப் பார்த்தவள், “ஏன் மூணு பேரும் இப்

உன் விழியில் கைதானேன் 6

  விழி 6 சந்தியா வேகமாக வீட்டுக்குள் நுழைய அதைப் பார்த்த தனலட்சுமி, ‘காலைல கிளம்பி வேலைக்குப் போனவ, என்ன உடனே வீட்டுக்கு வந்துட்டா?’ என்று யோசித்தபடியே, சந்தியா அருகில் வந்தவர், “என்னம்மா வேலைக்குப் போன கையோட திரும்பி வந்துட்ட? எதுவும் மறந்துட்டியா?” என்று கேட்க அவரிடம் தன் எரிச்சலைக் காட்ட விரும்பாத சந்தியா, “இல்ல அத்தை, திடீர்னு ஒரே தலைவலி. அதான் வந்துட்டேன்.” என்றாள் நிலைமையைச் சமாளிக்கும் பொருட்டு. “அச்சோ! திடீர்னு என்னம்மா ஆச்சு? காய்ச்சல் எதுவும் அடிக்கிதா?” என்று அவள் வெற்றியைத் தொட்டுப் பார்க்க அவர் கையைப் பிடித்துக் கொண்ட சந்தியா, “அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்தை. தலை மட்டும் தான் கொஞ்சம் வலிக்கிது. கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால் சரியாகிடும்.” என்றாள். “சரிம்மா… நீ அப்படி உக்காரு, நான் சூடா காபி போட்டுக் தரேன். குடிச்சிட்டுப் போய்க் கொஞ்ச நேரம் தூங்கு…” என்றவரிடம், “காபி எல்லாம் வேணாம் அத்தை. நான் தைலம் போட்டுட்டுத் தூங்குறேன்.” என்றவள் அவசரமாகத் தன் அறை நோக்கிச் செல்ல, அப்போது அவள் எதிரில் வந்த நிலானி, “என்னடி, வேலைக்குப் போன கையோட வந்துட்ட?” என்று கேட்க தமக்கையைத் தீயாக முறைத்துவ