உன் விழியில் கைதானேன் 22
விழி 22 அந்த வீடே அமைதியாக இருந்தது. அடுத்து என்ன என்று யோசிக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தனர் அனைவரும். கலைவாணி மட்டும் அழுதுகொண்டே இருந்தவர், “இப்படி ஆகிடுச்சே… இனி இவ வாழ்க்கையை எப்படிச் சரிபண்ணப் போறேன்.” என்று அழுது புலம்பியபடியே இருந்தவரை யாராலும் தேற்ற முடியவில்லை. அன்றைய தினம் திடீரென வீட்டுக்கு வந்த ஆகாஷ் குடும்பத்தைப் பார்த்து ஒரு நிமிடம் தடுமாறிய சூர்யா, அடுத்த நொடி தன்னைச் சுதாரித்துக் கொண்டு, “வாங்க… வாங்க ஆகாஷ்.” என்று அவர்களை வரவேற்று அமர வைத்தவன், “நானே உங்களை வந்து பார்த்துப் பேசணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.” என்று சொல்ல, “இனி அதுக்கு எந்த அவசியமும் இல்ல.” என்றான் ஆகாஷ் இறுகிய குரலில். அவன் சொன்னதைக் கேட்டு உள்ளுக்குள் அதிர்ந்த கலைவாணி, “அது மாப்பிள?” என்று ஏதோ சொல்லவர போதும் என்பது போல் கை காட்டிய ஆகாஷ், “எனக்கு நடந்த எல்லா விஷயமும் தெரியும்.” என்றவன், “நாங்க இப்ப இங்க வந்ததே இனிமே இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிட்டுப் போகத்தான்.” என்று சொல்ல அனைவருக்கும் நெஞ்சம் பதறியது என்றால், சந்தியா மட்டும் ஆகாஷை நிதானமாகப் பார்த்தபடி