இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன் விழியில் கைதானேன் 22

  விழி 22 அந்த வீடே அமைதியாக இருந்தது. அடுத்து என்ன என்று யோசிக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தனர் அனைவரும். கலைவாணி மட்டும் அழுதுகொண்டே இருந்தவர், “இப்படி ஆகிடுச்சே… இனி இவ வாழ்க்கையை எப்படிச் சரிபண்ணப் போறேன்.” என்று அழுது புலம்பியபடியே இருந்தவரை யாராலும் தேற்ற முடியவில்லை. அன்றைய தினம் திடீரென வீட்டுக்கு வந்த ஆகாஷ் குடும்பத்தைப் பார்த்து ஒரு நிமிடம் தடுமாறிய சூர்யா, அடுத்த நொடி தன்னைச் சுதாரித்துக் கொண்டு, “வாங்க… வாங்க ஆகாஷ்.” என்று அவர்களை வரவேற்று அமர வைத்தவன், “நானே உங்களை வந்து பார்த்துப் பேசணும்னு நினைச்சிட்டு இருந்தேன்‌.” என்று சொல்ல, “இனி அதுக்கு எந்த அவசியமும் இல்ல.” என்றான் ஆகாஷ் இறுகிய குரலில். அவன் சொன்னதைக் கேட்டு உள்ளுக்குள் அதிர்ந்த கலைவாணி, “அது மாப்பிள?” என்று ஏதோ சொல்லவர போதும் என்பது போல் கை காட்டிய ஆகாஷ், “எனக்கு நடந்த எல்லா விஷயமும் தெரியும்.” என்றவன், “நாங்க இப்ப இங்க வந்ததே இனிமே இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிட்டுப் போகத்தான்.” என்று சொல்ல அனைவருக்கும் நெஞ்சம் பதறியது என்றால், சந்தியா மட்டும் ஆகாஷை நிதானமாகப் பார்த்தபடி

உன் விழியில் கைதானேன் 21

 விழி 21 மாலை வேளையில் காவல் நிலையத்தின் முன் அந்த ஊரே கூடி இருந்தது. தேவாவை விடுதலை செய்ய வேண்டும் என்று அங்குப் பிரச்சனை நடக்க, அந்த நேரம் அங்கு வந்த சந்தியாவை அங்கிருந்த மக்கள் வாய்க்கு வந்தபடி வசைபாடத் தொடங்கினார். “தாலி கட்டின புருஷன்னு கூடப் பார்க்காம கூட இருந்தே குழி வெட்டிட்டாளே…” என்று அவளைத் தப்பு தப்பாகப் பேச அதையும் கேட்டவள், எதுவும் பேசாமல் காவல் நிலையத்தின் உள்ளே சென்றாள். நேராக தேவா இருந்த அறைக்கு வந்தவள், “இந்தக் கேஸ் பத்தி எனக்கு சில டீடைல்ஸ் வேணும்.” என்று கேட்க அவளை நிமிர்ந்து பார்த்த தேவா, “எனக்கு உன்கிட்ட ஒன்னு கேக்கணும். கேக்கலாமா?” என்று கேட்க, அவன் என்ன கேட்கப் போகிறான் என்று கணித்தவள், “ம்ம்ம்” என்றாள் அமைதியாக. “எல்லாமே பொய்தானா?” என்று அவன் கேட்ட அந்த ஒருவரி அவளை மொத்தமாக உலுக்கி இருந்தது. “நான் இந்தக் கேஸுக்காகதான் இந்த ஊருக்கு வந்தேன். எம்.எல்.ஏ கேஸ்ல உங்க மேல சந்தேகம் இருக்குன்னு அவரோட வைஃப் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தாங்க. அதைப்பத்தி இன்வெஸ்டிகேட் பண்ணதான் இங்க வந்தேன். இந்த ஊருக்குள்ள வந்த உடனேயே உங்களைப் பார்த்தேன். சாதரணமாய் உங்க கூடப் பழகினேன். கொஞ்ச

உன் விழியில் கைதானேன் 20

 விழி 20 சந்தியா, தேவாவின் இடையே கணவன், மனைவி என்ற உறவு இல்லாமல் இருந்தாலும், இருவருக்கும் ஒருவரின் மீது ஒருவருக்கு அன்பும், அக்கறையும் அதிகமாகவே இருந்தது. சந்தியா எவ்வளவு முயன்றும் அவன்பால் ஈர்க்கப்படும் தன் மனதை அவளால் தடுக்க முடியாமல் போக, பாவம் பெண்ணவள் தனக்குள் மருகித்தான் போனாள். அன்று சந்தியா, தேவாவைத் தங்கள் குலதெய்வக் கோயிலுக்கு அழைத்துச் சென்றிருந்தாள் ஆர்த்தி. பூஜைகள் அனைத்தும் நிறைவாக முடிந்து வீட்டுக்குத் திரும்பும் வேளை, எங்கிருந்தோ வேகமாக வந்த நடுத்தர வயதுப் பெண் ஒருத்தி தேவாவின் சட்டையைப் பிடித்தவர், “எம் புருஷன் எங்கடா? அவரை என்ன செஞ்ச நீ? எங்கடா அவரு?” என்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்க, அந்த இடமே கலவரம் ஆனது.  வேகமாக ஓடிவந்த ரகு, அந்தப் பெண்ணைப் பிடித்து இழுத்துத் தள்ளி நிறுத்த, அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் நின்ற சந்தியா அந்தப் பெண்ணின் அருகில் வந்தவள், “அவங்களை முதல்ல விடுங்க” என்று சொல்ல, அந்தப் பெண்ணின் கையை விட்டான் ரகு. “யாரு நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்க, அந்தப் பெண்ணோ “எனக்கு என் புருஷன் வேணும்” என்றார் கோவமாக தேவாவைப் பார்த்தபடி. “நீங்

உன் விழியில் கைதானேன் 19

 விழி 19 மருத்துவமனை அறையில் தேவா படுத்திருந்த கட்டிலின் அருகில் அவன் கையைப் பிடித்துக் கொண்டு விழி மூடிப் படுத்திருந்த சந்தியாவுக்கு‌ யாரோ தன்னை உற்றுப் பார்ப்பதுபோல் தோன்றச் சட்டென எழுந்தவள் கட்டிலில் இருந்தவனைப் பார்க்க, அவனும் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, அவள் கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர்த் துளிகள் முத்து முத்தாக இறங்கியது. முழுதாக இரண்டு நாள்கள் அனைவரையும் பயத்திலேயே வைத்திருந்த தேவா, எந்த ஆபத்துமின்றி அப்போதுதான் கண் விழித்திருந்தான். ‘எனக்குத் தெரியும்டா… எனக்குத் தெரியும், உனக்கு ஒன்னும் ஆகாதுன்னு…’ என்று நினைத்தவள் அவன் கையை மெல்ல அழுத்த, ‘இந்த ஜென்மத்தில் உன்னைத் தனியா நிம்மதியா விட்டு நான் போக மாட்டேன்டி.’ என்று அவளுக்குத் தன் கண்களால் பதில் சொன்னவனைப் பார்த்து, சந்தியாவுக்குச் சிரிப்பும் அழுகையும் சேர்ந்தே வந்தது. அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்து வேறு அறைக்கு மாற்றப்பட்டான் தேவா. இன்னும் ஒரு வாரம் மருத்துவமனையில் அவன் இருக்க வேண்டும் என்று, மருத்துவர்கள் சொன்ன பிறகே அனைவருக்கும் நிம்மதிப் பெருமூச்சு வெளிவந்தது. அந்த ஒரு வாரமும், ஆ

உன் விழியில் கைதானேன் 18

  விழி 18 கீர்த்தியின் திருமணத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்த சந்தியாவின் முன்னில் கையில் தட்டுடன் தயங்கித் தயங்கி வந்து நின்றாள் ஆர்த்தி. “என்ன ஆர்த்தி?” என்று கேட்ட சந்தியாவின் முன் அழகிய பட்டுப் புடவையையும், நகைகளையும் வைத்தவள், “இதெல்லாம் எங்க பரம்பரை நகை, வரப்போற மருமகளுக்காக எங்கம்மா ஆசையாய் எடுத்து வச்சது. இன்னைக்குக் கல்யாணத்துக்குப் போகும்போது இதெல்லாம் போட்டுட்டுப் போயேன்.” என்று கெஞ்சலாகக் கேட்க, அதற்கு மறுப்பாகத் தலையாட்டிய சந்தியா, “இல்ல ஆர்த்தி, இதெல்லாம் எனக்கு வேணாம். இந்த நகை எல்லாம் உங்கம்மா மருமகளுக்கு ஆசையாய் எடுத்து வச்சதுன்னு சொல்றீங்க… எனக்கு நடந்ததுக்குப் பேர் கல்யாணம்னே சொல்ல முடியாது. அப்படி இருக்க, எந்த வகையில் நான் இதெல்லாம் போட்டுக்கிறது சொல்லுங்க.” என்றாள் விரக்தியாகச் சிரித்தபடி. “ப்ளீஸ் சந்தியா, அப்படி எல்லாம் பேசாத. எப்படி நடந்திருந்தாலும் கல்யாணம் கல்யாணம் தான். நீ இந்த வீட்டு மருமகள் தான். இனி அதை யாராலயும் மாத்த முடியாது.” எனும் போதே சந்தியா ஏதோ சொல்ல வர ஆர்த்தி அவள் வாய் மேல் கை வைத்தவள், “நீ சொன்ன இல்ல, என்னை உன் அக்காவாப் பார்க்குறேன்னு. அது உண்மை