ஆழியின் ஆதவன் 2

 








ஆழி 2


காலையிலேயே ஆதவ் அரக்கப்பரக்க அவசரமாக ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருக்க, ஆழி அவனுக்காக டிபனை டேபிள் மீது எடுத்து வைப்பதை பார்த்தான்.


"எனக்கு டிபன் வேணாம். இன்னைக்கு முக்கியமான காண்ட்ராக்ட் ஒன்னு, அதுக்கு டிசைன் ஃபைனல் பண்ணனும், நான் சீக்கிரம் போகணும்."


"என்ன ஆதவ்… சாப்ட எவ்ளோ நேரம் ஆகப்போகுது. ரெண்டு வாய் சாப்ட்டு போடா" என்ற வெண்மதி தோளில் கை போட்டு மெதுவாக அணைத்த ஆதவ், 


"ரொம்ப முக்கியமான வேலை மா. சீக்கிரம் போகணும். சாமிகிட்ட எல்லாம் நல்லபடியா நடக்கணும்னு அப்ளிகேஷன் போட்டு வைங்க" என்று சிரித்தபடியே திரும்பி ஆழியைப் பார்த்தான்.


"நீ செய்ய மாட்டேன்னு தெரியும், உனக்கு நம்பிக்கை இல்லன்னு தெரியும், இருந்தாலும் கேக்கறேன். இந்தக் காண்ட்ராக்ட் நல்லபடியா முடிஞ்சு, நம்ம கம்பெனிக்கு நல்ல பேர் கிடைக்கணும்னு வேண்டிக்க," என்றவனை சட்டென திரும்பிப் பார்த்த ஆழினி‌,


"எனக்குன்னு வரும் போது தான், எனக்கு கடவுள் மேல நம்பிக்கை இருக்கிறதில்ல அவர் எனக்கு தேவையும் படல, பட் மத்தவங்களுக்காக, உங்களுக்காக, உங்க கம்பெனி டீல் நல்லா நடக்கணும்னு, நான் கண்டிப்பா வேண்டிக்கிறேன்‌." என்றவள் அது நம்ம கம்பெனி இல்ல, உன்னோட கம்பெனி என்பதை சொல்லாமல் சொல்ல, ஆதவ் இழுத்து மூச்சு விட்டவன், "தேங்க்ஸ்" என்று இரண்டடி நகர்ந்து, "வெளிய எங்கயும் போறீயா? காலையிலேயே ரெடியாகி இருக்க?" என்று கேட்டான்.


"ம்ம்ம் ஆமா, ஹாஸ்பிடல் போறோம். பாப்பாக்கு வேக்சின் போடணும்"


"நீ எப்டி போவ, நான் ஆபீஸ் போயிட்டு கார் அனுப்பவா?"


"இல்ல வேணாம். நான் கேப் புக் பண்ணிக்கறேன்" என்றவள் அருகில் வந்த ஆதவ், "தன் பர்சில் இருந்து பணத்தை எடுத்து ஆழியிடம் நீட்டினான்.


"இல்ல என்கிட்ட இருக்கு பரவாயில்ல" என்றவள் கையில் பணத்தை வலுக்கட்டாயமாகத் திணித்து, "இன்னைக்கு தேதி ஒன்னு, இது உன்னோட இந்த மாச சம்பளம்" என்று அழுத்தமாகச் சொல்ல, ஆழி ஒரு நிமிடம் அவனை இமைக்காமல் பார்த்தவள், தன் நெஞ்சின் மீது கை வைத்து அழுத்தியபடி கண்களை மூடி ஆழமாக மூச்செடுத்து, "தேங்க்ஸ்" என்று அந்தப் பணத்தை வாங்கிப் பார்த்தவள், "எதுக்கு இவ்ளோ?" என்று கேட்க,


"நீ குழந்தைய பாத்துக்க மட்டும் தான் இங்க வந்த. ஆனா, இப்ப சமைக்கிறதுல இருந்து வீட்டுப் பொறுப்பு எல்லாத்தையும் நீதான பாத்துட்டு இருக்க, அதான்" என்ற ஆதவ்வை நிமிர்ந்து பார்த்த ஆழினி, 'சரியென்று' லேசாக தலை ஆட்டியவள் அடுத்து ஒரு நிமிடம் கூட அவன் முன் நிற்காமல் அமைதியாக அங்கிருந்து செல்ல, வெண்மதிக்கு "ஐய்யோ" என்றாகி விட்டது.


"டேய் ஆதவ் ஏன்டா இப்படிச் செய்ற? அவ" என்று அவர் ஏதோ சொல்ல வர, ஆதவ் போதும் என்பதுபோல் கை காட்டினான்.


"ப்ளீஸ் மா... ப்ளீஸ் நீங்க நினைக்கிற மாதிரி இங்க ஒன்னும் நடக்க போறதில்ல, தேவையில்லாம எதுவும் யோசிச்சு அப்புறம் அது நடக்கலைன்னு ஃபீல் பண்ணாதீங்க" என்று விட்டு வெளியே சென்றான்.


ஆதவ் பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருக்க, முகில் சூடான டீயை அவன் முன் வைத்தான்.


"டேய் ஆதவ் இந்த டீயை குடிச்சிட்டு வேலையப் பாரு, மணி 12 ஆகுது. காலையில கூட ஒன்னும் சாப்டல நீ" என்றவனை சட்டென திரும்பிப் பார்த்த ஆதவ்,


"நான் காலையில சாப்பிடலைன்னு உனக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்க,


முகில், "ஐய்யோ மாட்டிக்கிட்டேனே, என்று நாக்கை கடித்துக் கொள்ள, ஆதவ் அவன் அருகில் வந்தான்.


"அம்மா ஃபோன் பண்ணாங்களா?" என்று கேட்க, முகில் ஆமாம் என்று தலையாட்டினான்.


"ம்ம்ம்" என்று இழுத்து மூச்செடுத்த ஆதவ், "அப்ப நான் சாப்டாதது மட்டும் இல்ல, அதுக்கு அப்புறம் நடந்ததும் உனக்கு தெரிஞ்சிருக்கும் இல்ல"


"ம்ம்ம் அம்மா சொன்னாங்க, நீ ஏன்டா இப்படி இருக்க?, ஆழிக்கு என்னடா குறை? ஏன் நீ அவளை விட்டு தள்ளி தள்ளி போற? நீதான் இப்படின்னா… அந்தப் பொண்ணு உனக்கு மேல இருக்கு, உங்க ரெண்டு பேரையும் என்ன சொல்றதுனே எனக்குப் புரியல."


"இங்க பாரு முகில் எங்க ரெண்டு பேருக்கு நடுவுல இதுவரை ஒன்னும் இல்ல, இனியும் இருக்காது. எங்களுக்கு நடுவுல எதாவது இருக்குன்னா, அது நிலா மட்டும் தான்‌. அதர் தென் தட், தெர் இஸ் நத்திங் பிட்வின் அஸ்."


"அதான் ஏன்னு கேக்குறேன். அவ ஒன்னும் நீ குடுக்குற சம்பளத்துக்காக உன் வீட்ல இல்ல, அவ ஒரு இன்டீரியர் டிசைனர், நீ சம்பளம் தந்து தான் அவ பொழப்பு ஓடணும்னு இல்ல, அது உனக்கே தெரியும். அப்படி இருந்தும் அந்த பொண்ணு உன் வீட்ல எதுக்கு வேலை பாக்குதுன்னு உனக்கு நல்லா தெரியும். எனக்குத் தெரிஞ்சு ஆழி பாக்க நல்ல பொண்ணா தான் தெரியுது. நிலா மேல பாசமா, உயிரா இருக்கு, இதுக்கு மேல என்ன தான் வேணும் உனக்கு? ஏன் இப்படிப் பிடிவாதம் பண்ற, என்னதான் டா காரணம்?." என்று கண்கள் சுருக்கிக் கேட்க,


முகிலை நிமிர்ந்து பார்க்காமல் "ஆஷா" என்று ஆதவ் வறண்ட குரலில் சொல்ல, முகில் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் நின்றான்.


அந்த மாலை வேளையில் ஆதவ் கார் காற்றை விட வேகமாகப் பறக்க, அவன் இதயம் தாறுமாறாக துடித்துக்கொண்டிருந்தது.


ஆதவனின் தொழில்முறை எதிரி ஒருவன், ஆதவ்வுக்கு இப்போது கிடைத்திருக்கும் காண்ட்ராக்ட்க்கு போட்டி போட்டு தோற்றுப் போக, அவன் மொத்த கோபமும் ஆதவ் மேல் திரும்பியது. ஆதவிடம் இருந்து எப்படியும் அந்தக் காண்ட்ராக்ட்டை கைப்பற்ற நினைத்தவன், ஹாஸ்பிடல் சென்ற ஆழி மற்றும் குழந்தை நிலாவை கடத்தி இருந்தான்.


ஆபிஸில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஆதவ் ஃபோன் அடிக்க, எடுத்துக் காதில் வைத்தவன்‌, சட்டென இருக்கையில் இருந்து எழுந்து நின்றான்.


"டேய் நீ சொன்ன மாதிரியே நான் செய்றேன். காண்ட்ராக்ட்டை நீயே எடுத்துக்கோ, பட் அவங்களை ஒன்னும் செஞ்சிடாத" என்று ஆதவ் கத்த,


"ம்ம்ம் தட்ஸ் குட் ஆதவ். இந்த அறிவு உனக்கு முதல்லயே இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். எனக்கும் கடத்துற வேலை மிச்சமாகி இருக்கும்." என்றவன் மயக்கத்தில் இருந்த ஆழியைப் பார்த்து, "ஆனாலும் பரவாயில்லை இந்தக் கடத்தல் ஒர்த் தான்" என்றவன்‌ அடுத்து சொன்ன வார்த்தையில் ஆதவனின் ரத்தம் கொதித்தது.


"ஒன்னு சொல்லியே ஆகணும் ஆதவ். இந்தப் பொண்ணு செம்மயா இருக்கா, ப்பா என்ன அழகுடா இவ. ஆமா, யார் இந்தப் பொண்ணு, எங்க ஆளுங்க ஒழுங்கா உன் பொண்ணைக் குடுத்துட்டு இவளை போகச் சொல்லியும் கேட்காம, அவங்ககிட்ட இருந்து உன் பொண்ணைக் காப்பாத்த ரொம்ப தான் ட்ரை பண்ணி இருக்கா… வேற வழியில்லாம எங்க ஆளுங்க அவளுக்கு போதை மருந்தை இன்ஜெக்ட் பண்ணி அவளையும் சேர்த்து தூக்கிட்டு வந்துட்டாங்க, போதையில கண்டு சொருகி இருக்கவும் பாக்கவே… ம்ம்ம்" என்று வக்கிரமாகச் சிரித்தவன்,


"இப்ப கூட பாரு அவ்ளோ போதையிலும் உன் பொண்ணை இறுக்கி கட்டிப் புடிச்சிட்டு உக்காந்துட்டு இருக்கா, எனக்கு ஆசையா இருக்கு ஆதவ், உன் குழந்தை இருக்க இடத்தில நான் இருக்கணும்னு" என்று சொல்ல, ஆதவ் கைகள் இறுகியது.


"டேய் இன்னொரு வார்த்தை அவளைப் பத்தி பேசின…" என்று கர்ஜிக்க,


"பேசினா என்னடா பண்ணுவ?, என்ன பண்ணுவ?" என்று நக்கலாகச் சிரித்தவன், "உனக்கு இன்னும் ஒன் ஹவர் தான் டைம். அதுக்குள்ள காண்ட்ராக்ட் டாக்குமெண்ட் என் பேருக்கு மாறி, அந்தப் பேப்பர்ஸ் என் கைக்கு வந்தாகணும். இல்ல… முதல்ல உன் அருமை குழந்தை உயிர் போகும். அடுத்து கொஞ்ச நேரம் கழிச்சு, இந்தப் பொண்ணு" என்று வக்கிரமாகச் சிரிக்க ஆதவின் கோபம் எல்லை கடந்தது.


குழந்தை நிலாவுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்று எந்த அளவு அவன் மனம் பதறியதோ, அதே அளவு ஆழிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று பதறியது.


"அவ நெனச்சிருந்தா குழந்தையை அவனுங்க கிட்ட கொடுத்துட்டு தன்னைக் காப்பாத்திக்கிட்டு இருக்கலாம். ஆனா, அவ… இப்ப அவ உயிரோட சேர்த்து" என்றவனுக்கு அந்தக் கடத்தல்காரன் சொன்னதை நினைத்துப் பார்க்க கூட உள்ளம் நடுங்கியது.


"கடவுளே அவங்க ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகிடக் கூடாது. ப்ளீஸ்" என்று வேண்டியவனுக்கு அந்தக் கடத்தல்காரன் ஆழியைப் பற்றிச் சொன்னது நினைவு வர, கோவத்தில் அவன் கண்கள் சிவந்தது. அந்தக் கோவம் அவன் கைகளில் பிரதிபலிக்க, கார் காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்தது.


இங்கு போதை மயக்கத்தில் இருந்த ஆழி, நிலாவை தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்கிப் பிடித்திருக்க, ஆழி நெஞ்சில் சாய்ந்திருந்த நிலா, தான் பாதுகாப்பாக தான் இருக்கிறோம் என்றுணர்ந்து அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.


இருவரையும் கடத்தியவன் ஆழி அருகில் வந்து, அவளையே விழுங்குவது போல் பார்த்து, "டேய் இதுவரை நீங்க செஞ்ச வேலையில உருப்படியான வேலை இதுதான்டா, ஆளு செம்மையா இருக்கா, அந்த ஆதவ் குடுத்து வச்சவன் தான்." என்றபடியே ஆழி கன்னத்தில் கை வைக்கப் போக, "கீரிச்" என்ற சத்தத்துடன் வேகமாக வந்து நின்றது ஆதவ் கார்.


அங்கு சென்ற ஆதவ் கண்ணில் முதலில் பட்டது, கண்கள் சொருகிய நிலையில், தலை நிலையில்லாமல் அப்படியும் இப்படியும் ஆடிக்கொண்டிருக்க, அவ்வளவு போதையிலும் நிலாவை தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்கிப்பிடித்த ஆழினி தான்.


"இப்ப ஆழிக்கு எப்படி இருக்கு" என்ற முகிலை நிமிர்ந்து பார்த்த ஆதவ் கண்கள் லேசாக கலங்கி இருந்தது.


"ரொம்ப ஹெவி டோஸ் ட்ரக் இவளுக்கு இன்ஜெக்ட் பண்ணி இருக்காங்கடா, இவ கண்ணு முழிக்கவே எப்படியும் இன்னும் ரெண்டு நாள் ஆகும்னு டாக்டர் சொன்னாங்க" என்றவன் குரல் கலங்கி இருந்தது.


"ஆழிக்கு ஒன்னும் ஆகாது ஆதவ். ஷி வில் பீ ஆல்ரைட்"


ஆதவ் லேசாக தலையை ஆட்டியவன்‌, "அவனுங்க?" என்று கேட்க,


"ஆல் செட்… நீ ஃப்ரீயா விடு நா பாத்துக்கறேன். நீ இவளை கவனி, அதுதான் இப்ப முக்கியம்."


"யு நோ முகில், அவனுக்கு தேவை நிலா தான். பாப்பாவ வச்சு என்ன ப்ளாக் மெயில் பண்றது தான் அவன் ப்ளான். இவ நெனச்சிருந்தா தப்பிச்சி போயிருக்கலாம். பட்..." என்று மயக்கத்தில் படுத்திருந்த ஆழியைப் பார்த்தவன், "ஏன்டா இவ போகல? " என்று அவளைப் பார்த்துக் கொண்டே கேட்க, மெதுவாக சிரித்தான் முகில்.


"இத நீ அவகிட்ட தான் கேக்கணும். மயக்கம் தெளிஞ்சதும் கேளு, இப்ப நா கிளம்புறேன். அவனுங்களைக் கொஞ்சம் என் கையால வெளுத்தா தான் எனக்கு நிம்மதியா இருக்கும் நான் வரேன்." என்ற முகில் அங்கிருந்து செல்ல, ஆதவ் நடந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.


ஆழி, நிலா கடத்தல் பற்றி ஆதவ் முகிலிடம் சொல்ல, முகில் ஆதவ் சொன்ன இடத்தில் அவனின் ஆட்களை குவித்து விட்டான். ஆதவ் அங்கு வந்தவுடன் அந்தக் கடத்தல் காரன் டாக்குமெண்டை வாங்க ஆசையாக முன்னே வர, பாவம் அவனுக்கு கபாலம் பிளந்து ரத்தம் தான் வந்தது.


ஆதவ் அவன் கழுத்தில் அடித்த ஒரு அடியில் அந்த ஆறடி எருமை "ஐய்யோ" என்று அலறியபடி அப்படியே தரையில் முட்டி போட்டு உட்கார்ந்து விட, அவனின் அடியாட்கள் ஆதவ் நோக்கி வர, முகில் ஏற்பாடு செய்திருந்த ஆட்கள் அவன் ஆட்களை அடித்து நொறுக்கினர்.


ஆதவ் அங்கிருந்த ஒரு இரும்பு ராடை எடுத்து, திரும்பி ஆழியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, "இந்த வாய் தானடா அவளை தப்பா பேசிச்சு" என்று ராடால் வாயில் ஒன்று வைக்க, அவன் மொத்த பல்லும் கொத்தாக வெளியில் வந்து கொட்டியது.


அடுத்து அவன் மண்டை உடைந்து, சண்டை முடித்து, ஆழியையும், குழந்தையையும் தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடல் வந்துவிட்டான் ஆதவன்.


ஆழியையே பார்த்துக்கொண்டிருந்த ஆதவுக்கு மதியம் முகில் பேசியது மனதில் ஓடியது.


ஆதவ், "ஆஷா" என்று சொல்ல,


"டேய் என்னடா பேசுற நீ?… ஓகே நா ஒத்துக்குறேன். ஆஷா உன் வைஃப், நிலாவோட அம்மா, உனக்கு உலாவ ரொம்ப புடிக்கும் தான். பட், அதுக்கு என்னடா பண்ண முடியும். உனக்கும் அவளுக்கும் வாழ்க்கை தொடங்கும் முன்னையே… தலையெழுத்து, எல்லாம் முடிஞ்சு போச்சு. கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் தான் நீங்க ஒன்னா இருந்தீங்க, அப்புறம் வேலை விஷயமா, வெளியூர் போன நீ அவங்க டெலிவரிக்கு தான் திரும்பி வந்த, ஆனா, அந்த மகராசி..‌." என்று பழைய நினைவில் மனம் கலங்கிய முகில் இழுத்து மூச்சு விட்டு, "அவதான் இப்ப உயிரோட இல்லயே ஆதவ். இன்பேக்ட் ஆஷாவோட உயிர், இப்ப ஆழிகிட்ட தான் இருக்குது. அத நீ மறந்துடாத…" என்ற முகிலின் வார்த்தைகள் ஆதவ் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்க, அவன் காதை இறுக்கி மூடிக் கொண்டான்.


இரண்டு நாட்கள் கழித்து மருந்தின் வீரியம் குறைந்து அன்று காலை தான் ஆழினி வீடு திரும்பி இருந்தாள்.


காலை உணவை ஆதவ் அவள் முன் நீட்ட, இன்னமும் அவளால் கை, கால்களை சரியாக அசைக்க முடியாமல் இருக்க, ஆதவ் உணவை கையில் எடுத்து அவள் வாயருகே கொண்டுச் செல்ல, ஆழி அவனை முறைத்துப் பார்த்தாள்.


"இந்த முறைப்பு எல்லாம் தின்னுட்டு தெம்பா முறை, இப்ப வாய தொற, எனக்கு வேலை இருக்கு" என்றவனை அவள் இன்னும் முறைக்க, ஆதவ் இது வேலைக்காகாது என்று அவள்‌ கன்னத்தைப் பிடித்து அழுத்த அவள் வாய் தன்னால் திறந்து கொண்டது.


தட்டில் இருந்த மொத்தத்தையும் ஊட்டி முடித்த ஆதவ், "இது வயிரா? இல்ல முதுமக்கள் தாழியாடி? இவ்ளோ பெருசா இருக்கு…?" என்றவன் முகத்தில் கஷ்டப்பட்டு அங்கிருந்த பொம்மையை எடுத்து அவள் வீச,


"இந்த நிலமையிலும் உன் திமிர் அடங்கலடி" என்று சிரித்தபடியே அவன் செல்ல, ஆழி போகும் அவனை எரித்துவிடும்  அளவு முறைத்துக் கொண்டிருந்தவள் கண்ணில் எதேச்சையாக அன்றைய செய்தித்தாள் பட, அதில் வந்த செய்தியைப் பார்த்து குழம்பி போனாள் ஆழினி.


அவளைக் கடத்திய ஆள், கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்த செய்தி தான் அது