Posts

Showing posts from February, 2022

நிஜம் 30

Image
  நிஜம் 30 ஷாலினி சொன்னதை கேட்ட த்வனிக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. "ம்ம்ம் எப்டியே பிரச்சனை முடிஞ்ச சரி… இனி அந்த இம்சையோட தொல்லை இருக்காது இல்ல ஷாலு?" "இல்ல த்வனி, விக்ரம் விட்ட அறைல அவனுக்கு மேல ஒரு பல் அவுட்டு, அதுக்கு அப்புறம் நம்ம ஆரு விட்டாளே பாரு ஒரு அறை… ம்ம்ம்... அதுல அவன் கீழ் பல்லு ரெண்ட காணும்னா பாரேன்" என்று சிரிக்க, "இவ அடிச்சால ஷாலு? என்று த்வனி ஆர்வமாக கேட்க, "பின்ன அடிக்காம என்னடி பண்ணுவேன். அந்த ராஸ்கல் இது மாதிரி சூசைட் பண்ணீப்பேன்னு மிரட்டி என்னை மாதிரி நெறய பொண்ணுங்களை எமோஷனல் பிளாக்மெயில் பண்ணி லவ் பண்ணவச்சிருக்கான்டி. அவங்ககிட்ட இருந்து நெறய பணம், நகைனு புடிங்கி இருக்கான்… என்கிட்ட கூட அம்மாக்கு உடம்பு சரியில்லன்னு சொல்லி என்னோட செயின் பணம்னு நெறய ஆட்டய போட்டுட்டான் தெரியுமா… நேத்து விக்ரம் அண்ணா அவனை அடிச்சி கேக்கும் போது தான் தெரியுது, அந்த நாய்க்கு அம்மாவே இல்லயாம். அவங்க செத்து பத்து வருஷம் ஆகுதாம். அது தெரிஞ்சது வந்து எனக்கு வெறி… வூட்டேன் ஒரு அறை… பல்லு கழன்டு விழுந்துடுச்சு" என்றதும் முவரும் வாய்விட்டு சிரித்தனர். ...

நிஜம் 29

Image
  நிஜம்‌ 29 த்வனி சோர்ந்து போய் அந்தப் பெரிய‌ சோஃபாவில் கண்‌ மூடியபடி சாயந்து படுத்திருந்திருக்க, அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் விக்ரம். கண்மூடி சாய்ந்திருந்த த்வனிக்கு உள்ளுக்குள் ஏதோ குறுகுறுக்க, மெல்ல கண் விழுத்து பார்க்க, விக்ரம் பயந்த முகத்துடன் அவளையே பார்த்துக்கொண்டிருப்தை பார்த்து, "டேய்... என்னடா என் மூஞ்சில என்ன இன்னும் ரிலிஸ் ஆகாத புதுப்படம் எதுமா ஓடிட்டு இருக்கு, அப்டியே வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு இருக்க" என்று கேட்க, அந்தச் சோஃபா அருகில் வந்து தரையில் அவள் முகத்தைப் பார்த்தபடி அமரந்தவன், லேசாக மேடிட்டு இருந்த த்வனியின் வயிற்றைக் கலங்கிய விழிகளுடன் பார்த்தான். "ஏன்டி ராட்சசி… நீ ஒகே தானா… காலையில இருந்து நீ நெறய முறை வாமிட் பண்ணிட்ட, எது சாப்டாலும் உடனே உடனே வாமிட் பண்ணிடுற… ரொம்பச் சோந்து போய் வேற இருக்க… உன்ன நான் இப்டி ஓஞ்சு போய் உக்கார்ந்து பாத்ததே இல்ல… எனக்கு உன்னைப் பாக்கவே பயமா இருக்குடி, இதுனால பாப்பாக்கு ஒன்னும் ஆகாது இல்ல. அ… அது… நல்லா தானா இருக்கு… ஒடம்பு முடியாட்டி சொல்லுடி டாக்டர்கிட்ட வேணும்னா போலாம். மருந்து தின்ன பயத...

நிஜம் 28

Image
  நிஜம் 28 த்வனி விக்ரம் வீட்டுக்கு வந்து அமைதியாக (அடிதாடியாக) ஒரு வாரம் சென்றிருந்தது. த்வனி முன்பு விக்ரம் வீட்டில் இருந்த போது இருந்த அறையிலேயே தங்க நினைக்க, விக்ரம் எக்காரணம் கொண்டும் நீ மாடிப்படி ஏறி இறங்க கூடாதென்று பிடிவாதமாகக் கீழே இருந்த பெரிய அறையில் அவளை இருக்க வைத்தான். அதற்கே எரிச்சலின் உச்சிக்கு சென்ற த்வனி, அடுத்து அவனும் அந்த அறையில் அவளுடன் தான் தங்குவேன் என்று சொல்ல, அவள் சாமியாடிவிட்டாள். "ஏது நீ என் கூட… நீயும் நானும் ஒரு ரூம்ல… ஏன்டா உனக்கு உன் உயிர் மேல ஆச இல்லயா… ஒழுங்க சொல்றேன் இத்தோட இதெல்லாம் நிறுத்திக்கோ இல்லேன்னு வை" என்று அவள்‌ கையை முறுக்க, "என் ரென்யா என் கைக்கு வர்ர வரை நான் உன்னோட, ச்சீ இல்ல… நீ என்னோட தான் இருந்து ஆகணும். என்ன கேட்ட உயிர் மேல ஆசை இல்லயன்னு தானா கேட்ட… அதுக்குப் பதில் உனக்கே நல்லா தெரியும். அண்ட் நீ ஒருவேளை நமக்குள்ள நடந்ததை மனசுல வச்சிட்டு இப்படிச் சொல்றீன்னா… பார் யூர் இன்பர்மேஷன், அன்னைக்கு மட்டும் நான் போதையில் இல்லாம இருந்திருந்தால் அந்தத் தப்பு நடந்தே இருக்காது. அது உனக்கும் தெரியும். உனக்கு என்னையும், எனக்கு உன்னை...

நிஜம் 27

Image
நிஜம்  2 7 விக்ரமை ஹாஸ்பிடலில் காணும் என்று தேடி திரிந்த வருண், என்ன செய்வது என்று புரியாமல், ஷாலினிக்கு ஃபோன் அடித்தான். முந்தைய நாள் இரவு வரை ஹாஸ்பிடல் இருந்த ஆருஷியும், ஷாலினியும் விக்ரம் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிந்த பின்னர், இரவு ஒரு மணிக்கு தான் த்வனி வீட்டுக்கு திரும்பி வந்தனர்.  பத்து நாட்களாக விக்ரம் தேடித் திரிந்து, இந்த ரெண்டு நாட்களில் அவன் பிழைப்பபானா மாட்டானா என்று பலவிதமான யோசனையில் இருந்து விலகி நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்த ஷாலினி தூக்கத்தை காலை வேலையிலேயே அவள் ஃபோன் சிணுங்கி அவள் தூக்கத்தைக் கெடுத்தது. அதில் கடுப்பின் உச்சத்திற்குச் சென்ற ஷாலினி, யார் அழைத்தது என்று கூடப் பார்க்காமல் ஃபோன் எடுத்துக் காதில் வைத்து, "ஏவன்டா அது நடுராத்திரியில கால் பண்ற பரதேசி" என்று கத்திவிட, "ஏய் பாத்து பேசு… மணி ஆறகுது, இது உனக்கு நடுராத்திரிய?" என்று வருணும் கடுப்பானான். "ஏன்டா எரும டைம் சொல்ல தான் கால் பண்ணிய, கருமம் புடிச்சவனே… என்கிட்ட பெரிய வால் கிளாக் இருக்கு அதுல நான் டைம் பாத்துக்கேன். நீ மூடிட்டு ஃபோன் வைடா நாதாரி" என்றவள் ஃபோன் அன...

நிஜம் 26

Image
  நிஜம்‌ 26 த்வனி அமைதியாக தன் எதிரில், உடல் முழுவதும் பல வண்ண வயர்கள் சுற்றி இருக்க, செயற்கை சுவாசம் மூலம் மெதுவாக மூச்சு விட்டுக்கொண்டிருந்த விக்ரமை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். இன்னும் ஒன்றிரண்டு நாளில் விக்ரம் கண்விழிக்க விடில் அவன் உயிருக்கு ஆபத்து என்று டாக்டர் சொல்லிவிட அந்த இடத்திலேயே "விக்ரம்" என்று கத்தியபடி சௌந்தர்யா நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மயங்கி சரிய, அந்த ஹாஸ்பிடலிலேயே சௌந்தர்யாவை அனுமதித்தான் வருண். ஒருபக்கம் விக்ரம், இன்னொரு பக்கம் சௌந்தர்யா என்று அனைவரும் அங்கும் இங்கும் ஓடி ஓடி ஓய்ந்து போயினர். விக்ரம் த்வனியிடம் அத்துமீறி நடந்த அன்றைய இரவுக்கு பின், த்வனிக்கு விக்ரம் முகத்தை பார்க்கக் கூட பிடிக்காமல், எங்கு நேரில் பார்த்தால் அவனை எதுவும் செய்துவிடுவேனே என்ற எண்ணத்திலேயே அவள் அவனை பார்க்காமல் விலகிச் சென்றாள். ஆனால், இன்று மயக்கத்தில் இருந்து கண்விழித்த சௌந்தர்யா, த்வனியிடம் கொஞ்சி கேட்டதால் அவனை பார்க்க ஹாஸ்பிடல் வந்திருந்தாள். அன்று வருணுக்கு ஃபோன் வந்த அடுத்த நிமிடம் த்வனிக்கு துணையாக ஆஷா வீட்டில் இருக்க, மற்ற அனைவரும் ஹாஸ்பிடல் விரைந்திருந்தனர். ...