Posts

Showing posts from October, 2023

விழி வழி காதல் நுழைந்ததடி 20

விழி 20 திருமணத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஆதர்ஷ், தன்வி இருவரும் சேர்ந்தே தேர்வு செய்தனர். உடுத்தும் உடையில் தொடங்கி அணியும் நகை வரை அவளுக்கான அனைத்தையும் ஆதர்ஷனே பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்தான். தன்வி எப்போதும் தன் உடைகள், மற்றும் நகை விஷயத்தில் கவனமாக இருப்பாள். அவள் தேர்வு செய்யும் அனைத்தும் எளிமையாக இருக்கும் அதே சமயம் மிகவும் அழகாக நேர்த்தியாக இருக்கும். அதை மனதில் வைத்து, தங்கள் பணவசதியை உடைகள், நகைகளில் காட்டாமல் அவள் விருப்பத்தைப் புரிந்து அனைத்தையும் எளிமையாக அதே சமயம் நேர்த்தியாகத் தேர்வு செய்தான்.  அந்த நாட்கள் இருவரின் இடையில் இருந்த அனைத்து இடைவெளிகளையும் குறைத்திருக்க, தன்விக்குக் கடந்த நாட்களில் அவன் மீதிருந்த மொத்தக் கோவமும் வருத்தமும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருந்தது.  காலமும் நேரமும் யாருக்காகவும் காத்துக்கொண்டு நிற்காது என்பது போல் நாட்கள் வேகமாக நகர ஆதர்ஷ், தன்வி திருமண நாளும் வந்தது.  தங்கள் குலதெய்வம் கோயிலில் மிக எளிமையாகத் திருமண ஏற்பாடுகளைச் செய்திருந்தார் வீரராகவன்.  எளிமையாக அலங்காரம் செய்து ஆதர்ஷ் அவளுக்காகத் ...

விழி வழி காதல் நுழைந்ததடி 19

விழி 19 வீரராகவனும் ஆதர்ஷும் தன்விக்காகக் காத்திருக்க, படிகளில் இறங்கி வந்த தன்வியின் சிவந்திருந்த முகத்தைப் பார்த்தவுடன் வீரராகவனுக்குப் புரிந்து விட்டது அவள் எந்தளவுக்கு மனவேதனைப்பட்டு அழுதிருக்கிறாள் என்று‌. தன்வி மெல்ல நிமிர்ந்து தாத்தாவின் முகம் பார்க்க, அவர் கண்களால் அவளை அருகில் அழைத்தார். வேகமாக அவர் அருகில் வந்தவள் அவர் தோளில் ஆதரவாகச் சாய்த்து கொண்டாள். அவள் தலையை மென்மையாகத் தடவிக் கொடுத்த தாத்தா, "யாரும் எதுவும் பேசினா திரும்ப மூஞ்சில அடிச்ச மாதிரி பதில் சொல்லிட்டு, அவங்க கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்றதை விட்டுட்டு நீ ஏம்மா இப்படி அழுதிட்டு இருக்க? இது உன் வீடு, நீ ஆதர்ஷனைக் கல்யாணம் செஞ்சாலும் இல்லாட்டியும் நீ இந்த வீட்டுப் பொண்ணு, இந்த வீரராகவன் பேத்தி, இந்த வீட்டோட வாரிசுமா… அதை முதல்ல நீ உன் மனசுல பதிய வை. இனி ஒருமுறை நீ இப்படி அடுத்தவங்க பேச்சைக் கேட்டுக் கலங்கி நிக்குறதை நான் பார்த்தேன்னு வை… அதுதான் நான் உன் முகத்தைப் பார்க்கும் கடைசி நாளா இருக்கும். அதுக்குப் பிறகு நான் உன் முகத்தைக் கூடப் பார்க்க மாட்டேன்." என்று ஒரு பெரிய இடியை அவள் தலையில் இறக்க, அது சரி...

விழி வழி காதல் நுழைந்ததடி 18

விழி 18 தன் அறைக்குள் ஓடி வந்த தன்வி, ஜன்னல் கம்பியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு நிற்க, மனம் ரணமாக வலித்தது. கண்ணீரைத் தவிர தனக்குத் துணை ஏதும் இல்லை என்று நினைத்தவள், எங்குச் சத்தம் வெளியே கேட்டு விடுமோ என்ற பயத்தில் வாயை மூடிக் கதறி அழுது கொண்டு இருந்தாள்.  அந்த நேரம் "படார்" என்று கதவு திறக்கும் ஓசை கேட்டுச் சட்டெனத் திரும்பிப் பார்க்க, அங்கு கதவின் பிடியைக் கையில் பிடித்தபடி பதட்டமாக நின்று கொண்டு இருந்தான் ஆதர்ஷ். ஆதர்ஷனைப் பார்த்த அடுத்த நொடி, எதைப் பற்றியும் யோசிக்காமல் தாயைக் கண்ட கன்றாக, "ஆது" என்று கத்தியபடி ஓடிச் சென்றவள் அவனை இறுகக் கட்டிக் கொண்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டு கதறி அழ, அவன் அவள் முதுகை ஆதரவாக வருடியபடி நின்றான்.  "கீ..கீழ… அ..அவங்க சொன்னது… நான் பணத்துக்காக தான் உங்…உங்களைக் கல்யாணம் பண்றேன்னு" என்று விசும்பியவள், "நீ…நீங்களும் என்னை அப்படி தான் நினைக்குறீங்களா? உ…உங்கப் ப…பணத்துக்கு தான்" என்றவள் அந்த வார்த்தைகளை முழுவதும் முடிக்க முடியாமல் தவித்து நிற்க, அவள் நின்ற கோலம் கண்டு ஆதர்ஷனுக்குக் கண்கள் கலங்கி விட்...