Posts

Showing posts from September, 2023

விழி வழி காதல் நுழைந்ததடி 16

விழி 16 கோவிலில் இருந்து வெளியே வந்த ஆதர்ஷ், தன்வி இருவரும் காரில் ஏறிக் கொண்டனர்.  தன்வி திடீரென்று தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தில் தடுமாறி இருந்தவள், ஆதர்ஷனின் முகத்தைப் பார்க்கத் தயங்கி சாலையை வெறித்தபடியே இருக்க, அவள் திரும்பி தன்னைப் பார்க்கப் போவது இல்லை என்று புரிந்து கொண்ட ஆதர்ஷ், "தன்வி" என்று ஆசைக் குரலில் அழைத்தான். பல வருடங்களாகக் கேட்டுப் பழகிய குரல் தான். ஆனால் இன்று ஏனோ அவன் வாய் மொழியில் தன் பெயரைக் கேட்டவள் காதில் அவன் குரல் தேனாய் தித்தித்தது. தனக்குள் ஏன் இந்த திடீர் மாற்றம் என்று அவளுக்கே தெரியவில்லை. சில மாதங்களாக அவனைப் பிரிந்திருந்ததால் ஒரு வேளை இப்படி எல்லாம் விசித்திரமாக உணர்வுகள் தோன்றுகிறதோ என்று எண்ணிக் கொண்டவள் அவனைத் திரும்பிப் பார்க்காமல், "ம்ம்ம்" என்று மட்டும் சொன்னாள். அதைப் பார்த்து, "ப்ச்ச்" என்று சலிப்பாக இரு பக்கமும் தலையாட்டியவன், "திரும்பி என்னைப் பாருடி" என்றான் கட்டாயக் குரலில். அவன் குரல் மாற்றத்தை உணர்ந்த தன்வி மெல்லத் திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள்.  "ஒரு வாரமா விரதம் இருந்தியா?" என்று அவள் ...

விழி வழி காதல் நுழைந்ததடி 15

விழி 15 தன்வியிடம் பேசிவிட்டுத் திரும்பிய வீரராகவனின் பார்வை இப்போது ஆதர்ஷன் மேல் அழுத்தமாகப் படிந்தது. "நீ சொல்லு ஆதர்ஷ்… நீ ஜனார்த்தன் கிட்டச் சொன்னதுக்கு என்ன அர்த்தம்? அந்தப் பையனுக்குத் தன்வியைக் கொடுக்க விருப்பம் இல்லாமல் நீ அப்படிச் சொன்னியா? இல்ல, உண்மையில் நீ தன்வியைக் கல்யாணம் செஞ்சுக்க முடிவு பண்ணிட்டியா?" என்று வெளிப்படையாகவே கேட்டு விட்டார் அவர். அவர் கேட்ட கேள்விக்கு ஆதர்ஷன் சில நொடிகள் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் குழம்பியபடியே திரும்பி தன்வியின் முகத்தைப் பார்த்தான். அவள் முகத்தில் எந்தவித அதிர்ச்சியோ‍, கேள்விகளோ, குழப்பமோ எதுவுமே இல்லை. அவள் முகம் நிர்மலமாக இருந்தது. 'இவளால் மட்டும் எப்படி எல்லா சிட்டுவேஷன்லயும் இப்படி நிதானமாவும், அமைதியாவும் இருக்க முடியுது. ஓ காட்! சைலன்ஸ் இஸ் எ வெரி வெரி டேஞ்சரஸ் வெப்பன்! மத்த விஷயத்தில் சாதுவா இருக்கறவ நான்னு வந்தா மட்டும் அடவுகட்டி ஆடுறாளே… ம்ம்ம், எல்லாம் என் தலையெழுத்து' என்று மனதில் புலம்பியவன், கண்களை அழுத்தமாக மூடி மூச்சை இழுத்து வெளியே ஊதியபடி திரும்பித் தாத்தாவைப் பார்த்து, "எனக்கு தன்வியை மேரேஜ்...

விழி வழி காதல் நுழைந்ததடி 14

விழி 14 தன் வீட்டு வாசலில் வந்து நின்றவர்களைப் பார்த்த ஆதர்ஷனின் புருவங்கள் சுருங்கி விரிய, 'இவன் இங்க எதுக்கு வந்தான்?' என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், "வாங்க மிஸ்டர்.ஜனார்த்தன். உள்ள வாங்க, நீயும் வாப்பா" என்று ஜனார்த்தனையும் அவர் பின்னால் நின்ற பிரசன்னாவையும் வரவேற்றார் வீரராகவன். அவர் குரலில் தன் யோசனையில் இருந்து வெளிவந்த ஆதர்ஷ், "வாங்க சார், வாங்க பிரசன்னா" என்று அவனுக்ம் கடனே என்று மரியாதைக்காக வரவேற்றான். நால்வரும் வரவேற்பு அறையில் எதிரெதிரில் அமர்ந்திருக்க வீரராகவனோ, "தன்வி, கெஸ்ட் வந்திருக்காங்க பாரு, ரெண்டு காஃபி கொண்டு வாம்மா" என்று சொல்ல, அதைக் கேட்ட ஆதர்ஷனுக்கு ஏனோ தன்வி அங்கு வந்து பிரசன்னாவைப் பார்ப்பது அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.  தன்வி என்ற பெயரைக் கேட்டதும் பிரசன்னாவின் விழிகள் ஆர்வமாக அங்கும் இங்கும் அவளைத் தேடி அலைபாய்ந்து கொண்டிருந்ததைப் பார்த்த ஆதர்ஷனுக்கு உள்ளுக்குள் பற்றிக்கொண்டு வந்தது. "தாத்தா, தன்வி கோயிலுக்குப் போகனும்னு சொல்லிட்டு இருந்தா. அவளை டிஸ்டர்ப் பண்ண வேணாம், அவ கோயிலுக்குக் கிளம்பட்டும்‌. ...