Posts

Showing posts from April, 2022

நிஜம் epilogue

Image
  நிஜம் 40 விக்ரம் மீட்டிங் முடித்து, சீக்கிரமே வீட்டுக்கு வந்ததுவிட்டான். "அடியேய் சீக்கிரம்டி, எவ்ளோ நேரம் தான் குளிப்ப… நீ என்ன‌ முகத்துக்குச் சோப் போடுறீய, இல்ல சுவர்ல முகத்தை வச்சு பரபரன்னு தேக்கிறீய? இவ்ளோ நேரம் ஆகுது. என்ன தேச்சாலும் இருக்குறது தான்டி இருக்கு, சீக்கிரம் வாடி, கெளம்பணும் டைம் ஆச்சு." என்றவன் டமார் என்று கதவு திறுக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவன் மூச்சடைத்து நின்றான். குளித்து முடித்து, கூந்தலில் துளிதுளியாகத் தண்ணீர் சொட்டிக்கொண்டிருக்க, வெறும் டவலை மட்டுமே உடலில் சுற்றிக்கொண்டு, கோவத்தில் மூச்சுக் காற்றில் அனல் வீச, இடுப்பில் கைவைத்து, எதிரில் இருந்தவனை தீயாக முறைத்துப் பார்த்துக்கொண்டு நின்றாள் த்வனி. "என்னடா சொன்ன நீ… நான் சுவத்துல மூஞ்ச வச்சு தேய்க்கணும்மா… என்ன செஞ்சாலும் இருக்குறது தான் இருக்குமா… எவ்ளோ தைரியம் இருந்த நீ அப்டி சொல்லுவ. என் அழகுக்கு என்னடா குறைச்சல்… காலேஜ்ல என் பின்னாடி சுத்தாத ஆளே இல்லனு உனக்குத் தெரியாது. ஏன் உன் ஃப்ரண்ட் ஒருத்தன்... அவன் பேரு என்ன? ஹான்… ரகு அது கூட எனக்கு நூல் விட்டுப் பாத்தது உனக்கும் தெரியும் இல்...

நிஜம் 39

Image
  நிஜம் 39 அழகான நீரோடை போல் விக்ரம், த்வனி வாழ்க்கை சலசலவெனச் சத்தமாக ஓடிக்கொண்டிருந்தது. இருவருக்கும் இடையில் நாளுக்கு நாள் அன்பும் புரிந்தாலும் எந்த அளவுக்கு வளர்ந்ததோ, அதோ அளவு வம்பு, சண்டையும் வளர்ந்தது. ஆஷா சொன்னது போல் அடிதடியாக, அழகாக இல்லறத்தை நடத்திய இருவரும் தாம்பத்தியத்தை மட்டும் தள்ளி வைத்தனர். திருமண முடிந்த இருவரும் இணைந்தே ஆகவேண்டும் என்பதை விடுத்து, இருவருக்கும் மனம் இசையும் வேளையில் அது இயல்பாக நடக்கட்டும் என்று இருந்துவிட, அன்பும் வம்புமாய் அழகாக அவர்கள் நாட்கள் நகர ஆரம்பித்தது ஒரு வருடம் ஓடி இருந்தது. "டேய் லூசு, இன்னைக்கு அந்த வீணா போன வருண் வருதுன்னு சொன்னீயே எப்ப வருதும் அது…" என்று மரியாதையாகக் கேட்ட தன் மனைவியைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டான் விக்ரம். "ஏன்டி கேக்குறதை கொஞ்சம் ஒழுங்க கேட்ட தான் என்னவாம். அவன் தான் என் தங்கச்சி தங்கச்சின்னு டி‌.ஆர் மாதிரி உயிரையே விடுரான். நீ அவனுக்கு மறந்து கூட மரியாதை குடுக்க மாட்டுங்கிற… இன்னும் ரெண்டு நாள்ல அவனுக்கு ஷாலுக்கும் கல்யாணம், உன் ஃப்ரண்ட் புருஷனுன்ற முறைக்காது அட்லீஸ்ட் கொஞ்சம் பாத்து பேசுடி....

நிஜம் 38

Image
நிஜம் 38 த்வனி ஒரு நிமிடம் தூங்கும் மகளின் முகத்தைக் கண்களில் தேக்கிக்கொண்டவள், "பாப்பாவை நல்லா பாத்துக்க, நீயும் ஒழுங்க சாப்டு" என்று விக்ரமை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் தரையைப் பார்த்து சொல்லிவிட்டு சென்றவள், இடது கை கதவின் கைப்பிடியில் இருக்க, அவள் வலது கை விக்ரமின் கைப்பிடிக்குள் இருந்தது. த்வனி திரும்பி அவனைப் பார்க்காமல் அமைதியாக நிற்க, "நான் அப்டி என்னடி பாவம் பண்ணேன். ஏன் எல்லாரும் என்னை விட்டு விட்டு போறீங்க… முதல்ல அம்மா, அப்றம் ரென்யா, இப்ப நீயும் போற இல்ல… ஏன் உங்க யாருக்குமே என்னைப் புடிக்கலிய? நான் அப்டி என்ன பாவம் செஞ்சேனு எல்லாரும் என்னை விட்டு விலகி போறீங்க" என்று உயிர் இல்லாமல் வந்த விக்ரமின் வார்த்தைகள் த்வனியை உயிரோடு வதைக்க, கண்களை இருக்க மூடி, உதட்டை கடித்து, அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக நின்றாள். விக்ரம் தன் பிடித்திருந்த அவள் கையில் அழுத்தத்தைக் கூட்டி,  "போகாதடி… நீயும் என்னைவிட்டு போய்ட்டா எனக்குன்னு யாருமே இல்லடி… பாப்பாவோட நானும் உன்னோடவே இருக்குறேனே ப்ளீஸ்… நீ என்னைவிட்டு போன நான் அநாதை ஆகிடுவேன்டி" என்றவன் வார்த்தை...

நிஜம் 37

Image
  நிஜம் 37 த்வனி அமைதியாகத் தன் மடியில் பால் குடித்துவிட்டு, நிம்மதியாக லேசாக வாயைத் திறந்தபடி தூங்கிக் கொண்டிருந்த, தன் மகளைப் பார்க்க பார்க்க அவளுக்கு நெஞ்சம் கணத்தது. த்வனிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அதிகமாக நேரம், விக்ரம் அணைப்பிலேயே இருந்த குழந்தை அவன் கை சூட்டுக்கு நன்கு பழகி விட, இப்போது அவனின் ஸ்பரிசம் இல்லாமல் பாதி நேரம் அழுதுகொண்டே இருந்தது. அதை நினைத்து த்வனியின் கவலையில் இருக்க, அந்த நேரம் சௌந்தர்யா தவ்னிக்கு ஃபோன் செய்திருந்தார். த்வனியும் குழந்தையும் சென்ற நாளில் இருந்து, விக்ரம் அவன் அறையை விட்டு வெளியே வரவில்லை என்றும், உணவு கூட எடுத்துக்கொள்ளாமல், என்னேரமும் குழந்தையின் தொட்டிலை பார்த்தபடியே அழுதுகொண்டு இருக்கிறான் என்று சொல்ல, த்வனிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஒரு பக்கம் குழந்தை விக்ரமை பார்க்காமல் அழுது கொண்டிருக்க, அங்கு விக்ரமின் நிலையே இதை விட மோசமாக இருக்கிறது. இதற்கு என்னன செய்யலாம் என்று யோசித்தவள், கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தாள். "த்வனி" என்ற கதிரின் குரல் கேட்க, "உள்ள வா கதிர்" என்றாள். "தவ்னி எனக்கு உன்னை இப்டி பாக்க...