இதயம் 9
இதயம் 9 மறுநாள் காலையில் நேரத்துக்கே தயாராகி ஆதர்ஷன், தர்ஷினி இருவரும் போக வேண்டிய இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் வந்த வேலை முழுவதும் சிறப்பாக முடிந்திருக்க, ஆதர்ஷின் கம்பெனியோடு தொழில் தொடர்பு வைத்துக் கொள்வதாக முடிவு செய்து, அனைவரும் கையெழுத்திட்டிருக்க, ஆதர்ஷனுக்கு அவன் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் போனது. அந்த நேரம் தர்ஷினி, “கங்கிராஜுலேஷன்ஸ் தர்ஷன்” என்று தன் வலக்கையை நீட்டிப் புன்னகை முகமாக அவன் முன் நிற்க, மகிழ்ச்சி மிகுதியில் இருந்த ஆதர்ஷ், அவளைத் தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டவன், “தேங்ஸ் வினி… தேங்க்யூ சோ மச்” என்று உற்சாகம் நிறைந்த குரலில் சொல்ல, பாவம்! அவள்தான் அவன் சொன்னதை உணரும் நிலையில் இல்லை. ஆதர்ஷ் அவளை அணைத்த கணமே அவள் மனம் அவளது கட்டுப்பாட்டில் இல்லாமல் ஆகாயத்தில் சஞ்சரிக்கத் தொடங்கிவிட, அவனது ஒற்றை அணைப்பில் உலகம் மறந்து நின்றாள், அவன் மேல் பித்தம் கொண்ட பேதை அவள். அவள் நிலையை உணராத ஆதர்ஷ் அவளை அணைத்தபடியே, “இதெல்லாம் உன்னால தான் வினி… இது என்னோட பல வருஷக் கனவு… இன்னைக்கு இது நிறைவேற நீயும் ஒரு முக்கியமான காரணம்” என்றவனின் பிடி இறுகிய போ